India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெயில் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள தாகச்சமணி மூலிகைக் குடிநீரை பருகலாமென சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. பதிமுகம், கருங்காலி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நன்னாரி, ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம், அதிமதுரம் போன்றவற்றின் தொகுப்பான தாகச்சமணி மூலிகைப் பொடியை (ஒரு தேக்கரண்டி) ஐந்து லிட்டர் நீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்தலாம்.
2024 மார்ச்சில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (சரக்கு & சேவை) ₹5.86 லட்சம் கோடியாக (70.21 USD) மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகத் துறை அமைச்சக புள்ளிவிபரங்களின்படி, 2023 மார்ச்சுடன் ஒப்பிடுகையில், 3.01% எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 41.68 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு 28.54 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக நிதித் திரட்ட படமொன்றை எடுக்கவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். ‘கை கொடுக்கும் கை’ மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில் நடந்த மல்லர் கம்பம் சாகச நிகழ்வில் பேசிய அவர், “மாற்றுத்திறனாளி பசங்க வீட்டு வாடகை கட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடு கட்டித் தர உள்ளேன். அதற்காக இப்போது கதை விவாதம் நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.
ஒடிசா அருகே சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி ஐவரை பலி வாங்கியிருக்கிறது. கட்டாக் நகரிலிருந்து மேற்குவங்கம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, பராபதி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பயணிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 38க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
➤1520 – ஐந்தாம் சார்லஸுக்கு எதிராக ஸ்பானிய கிளர்ச்சி தொடங்கியது. ➤1799 – டாபோர் மலை சமரில் நெப்போலியன் துருக்கியரைத் தோற்கடித்தார். ➤1889 – சார்லி சாப்ளின் பிறந்த நாள். ➤1961 – கியூபாவை பொதுவுடைமை நாடாக பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார். ➤1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் தொடங்கியது. ➤1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது. ➤2013 – விடுதலை வீரர் லகுமையா மறைந்த நாள்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், நாட்டை அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் தொலைநோக்குப் பார்வையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தோல்வி பயத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜகவின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சிக்கின்றன எனக் கூறினார்.
வெளிநாடுகளுக்கு 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதியளிக்க வேண்டுமென இந்திய சா்க்கரை ஆலைகள் சங்கம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதே வேளையில், ஆலைகளில் அதிகப்படியாக இருப்பில் உள்ள கரும்புச்சாறை எத்தனால் தயாரிப்புக்குப் பயன்படுத்த அனுமதி அளிப்பது தொடா்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நடப்பு பருவத்துக்கான சா்க்கரை உற்பத்தி மார்ச்சில் 3 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶ குறள் எண்: 3
▶குறள்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
▶பொருள்: மலர் போன்ற மனத்தில் நிறைந்த பெருந்தகையாளரைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, அழிவற்ற இன்ப உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
தேர்தல் நேரத்தில் விசாரணை நிறுவனங்களை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கப் பார்க்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கூச் பெஹாரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசிய அவர், “தோல்வி பயத்தில் உள்ள பாஜக, முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கும் சமயத்தில் என்ஐஏ விசாரணை முகமை மூலம் எதிர்க்கட்சியினரை கைது செய்ய சதித்திட்டம் தீட்டி வருகிறது” என்றார்.
காஸா முனையில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்திய அரசு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லஹியான் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, ஸோடியாக் குழுமத்தின் கப்பலில் உள்ள 17 மாலுமிகளை இந்திய அரசின் பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.