news

News April 2, 2024

அபார வெற்றி: புதிய கருத்துக் கணிப்பு

image

தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 39 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும் என்று இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த முறை அதிமுக ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை அதுவும் கிடைக்காது என்று இந்தியா டுடே நாளேடு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்திருக்கும் பாஜகவுக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

இதிலெல்லாம் தமிழகம் முதன்மை மாநிலம்

image

ஊழல், கடன் வாங்குவது, போதைப்பொருள் விற்பனையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கனவில் வீடு கட்டும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், திமுக அளித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றப்படவில்லை என்றார். மேலும், மக்கள் சிந்திக்காவிட்டால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.

News April 2, 2024

அழகுக்காக 43 அறுவைசிகிச்சை செய்தவரின் நிலைமை

image

பார்பி பொம்மை போல மாற ஆசைப்பட்டு 43 அறுவை சிகிச்சைகள் செய்த பெண்ணின் நிலைமை மோசமாகியுள்ளது. ஈராக்கை சேர்ந்த டாலியா நயீம் (30) என்ற இளம்பெண் பார்பி போல மாற ஆசைப்பட்டு முகம், மூக்கு மற்றும் மார்பகங்களில் அறுவை சிகிச்சை
செய்துள்ளார். சிகிச்சைக்குப் பின் உதடுகள் வீங்கி முகம் வித்தியாசமாக மாறியுள்ளது. மக்கள் அவரை ஜாம்பி, டெவில் என தற்போது அழைக்கின்றனர். அவரது முகம் எப்படி உள்ளது என நீங்களே கூறுங்கள்.

News April 2, 2024

படம் பிடிக்காவிட்டால் செருப்பால் அடியுங்கள்

image

ஹாட்ஸ்பாட் படம் பிடிக்காவிட்டால் மக்கள் என்னை செருப்பால் கூட அடிக்கலாம் என அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என வேதனை தெரிவித்த அவர், மலையாளப் படங்களை ஆதரிக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தையும் திரையரங்கில் பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஹாட்ஸ்பாட் படம் மார்ச் 29-ல் ரிலீசானது.

News April 2, 2024

இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓபிஎஸ்

image

ராமநாதபுரம் தொகுதியின் பரமகுடி பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது தவறுதலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட அவர், பழக்க தோஷத்தில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டுவிட்டதாக கூறினார். பின்னர், பலா சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தை மீட்கவே போராடுவதாக பேசினார்.

News April 2, 2024

சாதித்தார் குயின்டன் டி காக்

image

ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களை (99 போட்டிகள்) கடந்த 6-வது வீரர் என்ற சாதனையை டி காக் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் அவர், RCB-க்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி 81 ரன்களை குவித்ததன் மூலம் இந்த சாதனையை படைத்தார். முன்னதாக கெயில் (75 போட்டிகள்), கே.எல்.ராகுல் (80), பட்லர் (85), வார்னர் (94), டூ பிளெஸிஸ் (94) ஆகியோர் 3,000 ரன்களை கடந்துள்ளனர்.

News April 2, 2024

கடைசி இரண்டு ஓவரில் மரண அடி

image

RCB-க்கு எதிரான போட்டியில் லக்னோ அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடி வந்தது. ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்ததும் ரன் சரியத் தொடங்கியது. ஆனால், கடைசியில் களமிறங்கிய பூரண், கடைசி 2 ஓவர்களில் 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதில் ஒரு சிக்ஸர் 106 மீ தூரம் சென்றது. இன்று அடித்த 5 சிக்ஸர்களுடன் சேர்த்து IPL தொடரில் 103 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரது அதிரடியால் LSG 181/5 ரன்கள் எடுத்துள்ளது.

News April 2, 2024

கொலை மிரட்டல் விடுத்தாரா சரண்யா பொன்வண்ணன்?

image

நடிகை சரண்யா பொன்வண்ணன் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்ததில், பொய் புகார் என தெரியவந்துள்ளது. பார்க்கிங் தொடர்பாக சரண்யாவின் உறவினருக்கும் ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தம் இல்லாமல் சரண்யா மீது புகார் அளித்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

News April 2, 2024

பஞ்ச் டயலாக் பேசி பிரசாரம் செய்த கமல்

image

தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும் தனக்கும் உள்ள காதல் சாதரண காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழகம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் தான் சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காக வந்துள்ளேன் என்றார்.

News April 2, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

image

ரேஷன் அட்டைதாரர்கள் புதிதாக கை ரேகைப் பதிவு செய்யாவிட்டாலும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை கைரேகைப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31உடன் முடிவடைந்த நிலையில் பதிவு செய்யாதவர்கள் பொருட்கள் வாங்க முடியாது என்று தகவல் வெளியானது. கூட்டுறவுத் துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

error: Content is protected !!