India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழகத்தைப் போல கனடாவிலும் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெருமிதமான தருணம். காலை உணவுத் திட்டத்தால் 16 லட்சம் குழந்தைகள் பயன் அடைகிறார்கள். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக தான் திமுக உழைக்கிறது” என கூறியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶டாஸ்மாக் கடைகளை அகற்றவே அரசியலுக்கு வந்துள்ளோம்: அண்ணாமலை
▶திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் என்னை எதிர்க்கிறார்கள்: சீமான்
▶கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, பாஜக இருவருமே துரோகிகள்: ஜெயக்குமார்
▶பாஜகவுக்கு டெபாசிட் கிடைத்தால் அதுவே பெரிய ஆச்சரியம்: முத்தரசன்
▶தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதிக்கு மாநில அரசு கணக்கு கூற வேண்டும்: நிர்மலா சீதாராமன்
▶நடிகர் விக்னேஸ்வர ராவ் காலமானார்
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர், காஸா விவகாரத்தில் ஐ.நா.வால் உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை எனக் கூறிய அவர், ஐ.நா.வில் இந்தியா நிரந்தர உறுப்பினராக உலகம் முழுவதும் ஆதரவு குரல் எழுந்துள்ளது என்றார். மேலும், அதற்கான வேலைகளில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, எகிப்து நாடுகள் ஈடுபடுவதாகவும் கூறினார்.
பெங்களூரு அணிக்கு எதிரான 15ஆவது ஐபிஎல் போட்டியில், 29 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில், 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. அபாரமாக பந்துவீசிய மயங்க் யாதவ், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பயணி, டிடிஆரை கீழே தள்ளிவிட்டதில் டிடிஆர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்குடன் இருந்த தொடர்பு குறித்து, இயக்குநர் அமீரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான அமீரிடம் NCB அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். முன்னதாக, ஜாஃபர் சாதிக் தயாரிப்பில் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை அமீர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் நுழையப் போகிறார். இதனால் மேஷ ராசியினருக்கு போதிய பண வரவு, கடக ராசியினருக்கு புதிய வேலை வாய்ப்பு, மிதுன ராசியினருக்கு வெளிநாடு செல்லும் யோகம், கன்னி ராசியினருக்கு தொழில் தொடங்கும் வாய்ப்பு மற்றும் துலாம் ராசியினருக்கு செய்யும் செயலில் எல்லாம் வெற்றி கிடைக்கப் போகிறது. இந்த பலன்கள் குறிப்பிட்ட நட்சத்திற்கு ஏற்றார் போல மாறுபடும்.
பெங்களூருவில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சீசனில் மட்டும் இதுவரை 250 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. சிராஜ் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்த லக்னோ வீரர் டி காக், நடப்பு சீசனில் 250வது சிக்ஸரை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். நடப்பு சீசனில் இதுவரை அதிகபட்சமாக SRH வீரர் க்ளாசென் 17 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் RCB வீரர் மேக்ஸ்வெல் ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் டக் அவுட்டான அவர், ஐபிஎல்லில் அதிகமுறை (16) டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக் இருவரும் 17 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். மந்தீப் சிங், பியுஷ் சாவ்லா, சுனில் நரைன் 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.