India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர், நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ZIM-BAN இடையேயான டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளதால், அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு CSK & பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதன்படி, மே 1ஆம் தேதி பஞ்சாபிற்கு எதிரான போட்டி வரை அவர் விளையாடுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடுத்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவாக இருக்கிறோம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். வன்முறை வெறியாட்டங்களையும், வடக்கே இருந்து ஏவப்படும் விஷ அம்புகளையும் முறியடித்து வெற்றி பெற வேண்டும். வம்பு சண்டைக்குப் போவதில்லை; ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று பாஜகவை நேரடியாக எச்சரித்துள்ளார்.
வாரணாசி தொகுதிக்கு வேட்பாளரை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் கூட்டணி அமைக்காமல் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி இன்று 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு எதிரான வேட்பாளராக அதார் ஜமால் லரியா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
கொளுத்தும் வெயிலால் ஏற்படும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணியை பலர் வாங்கி சாப்பிடுகின்றனர். அந்தப் பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் *இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது *கண் பார்வை குறைபாட்டை போக்கி அதை மேம்படுத்துகிறது *பல் ஈறுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது * உதடுகள் வறண்டு போகாமல் தடுக்கிறது * உடல் சூட்டைத் தணிக்கிறது
ராகுல் காந்தி மீது அவதூறு பரப்ப வேண்டாம் என வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்துள்ளது. இதய பாதிப்பு ஏற்பட்ட முதியவர் பெரியதம்பிக்கு உதவுமாறு சேனல் சார்பாக ராகுல் காந்தியிடம் உதவி கேட்டதாகவும், அதனை அவர் மறுத்ததாகவும் வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து விளக்கமளித்த சேனல், இது முற்றிலும் பொய். எங்கள் வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணா. பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
தேமுதிக விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அவரது சகோதரர் சண்முக பாண்டியன் வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு சென்ற அவர், அங்கு பணியாற்றுபவர்களிடம் ஆதரவு கேட்டார். தொழிலாளர்களுடன், தரையில் அமர்ந்து பேசிய அவர், இந்த முறை தனது அண்ணனுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று SRH-க்கு எதிரான போட்டியில் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய RCB போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கோலி – டு பிளெசிஸ் கூடுதலாக 2 ஓவர்கள் விளையாடி ஓரளவுக்கு ரன்களை குவித்திருந்தால் அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடி இருந்தால் போட்டி RCB பக்கம் திரும்பி இருக்கலாம். அந்த அணி பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து காணாமல் போய்விடுவார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜகவின் தலைவராக ஓபிஎஸ், பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் வருவார்கள். அதிமுகவில் இடமில்லாத நிலையில் பாஜக தான் அவர்களின் சாய்ஸ் ஆக இருக்கும் என்ற அவர், அண்ணாமலையின் கதையை தேர்தலுக்கு பிறகு பாஜக முடித்து வெளியே அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார்.
‘குட் பேட் அக்லி’ படத்தில், அஜித்துக்கு வில்லனாக யார் நடிப்பது? என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, ‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கங்குவா படத்தில் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தீவிரப் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.