news

News April 3, 2024

நியூசி. அணிக்கு தலைமை தாங்கும் மைக்கேல் பிரேஸ்வெல்

image

நியூசிலாந்து அணிக்கு மைக்கேல் பிரேஸ்வெல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டி20 வரும் 18ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. நியூசி. முன்னணி வீரர்களான வில்லியம்சன், சாண்ட்னெர், க்ளென் ஃபிலிப்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். இதனால் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் இந்த அணி களம் காண்கிறது.

News April 3, 2024

தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு.. எச்சரிக்கை

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் பணப்பட்டுவாடா ஜோராக நடக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அதே நேரம் வணிகர்கள் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இதனால், பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

News April 3, 2024

முருகன் உள்ளிட்ட 3 பேர் இன்று இலங்கை பயணம்

image

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் இன்று விமான மூலம் இலங்கை செல்கின்றனர். திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு காவல்துறை வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 3 பேரும் இன்று காலை 10 மணிக்கு இலங்கை செல்லும் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

News April 3, 2024

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

image

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 இல் தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் காணொளி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

News April 3, 2024

பேத்தியே மன அழுத்தத்தை போக்கும் மருந்து

image

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் மகன் கரண் அதானிக்கு காவேரி என்ற 14 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முதன் முதலாக தனது பேத்தியின் படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அதானி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், தனது பேத்தி கண்களின் பிரகாசத்துடன் ஒப்பிடும்போது உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் மங்கலாகவே தெரிவதாகவும், தனது மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக பேத்தி உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

News April 3, 2024

முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

image

டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்பு தான் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்பவர்களுக்கு சம்பளம் ரூ.25 உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய கூட்டத்திற்கு பின்பும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

News April 3, 2024

பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

image

தமிழக பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது. அத்துடன், ஓபிஎஸ், டிடிவி, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், குஷ்பு உள்ளிட்ட 40 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

News April 3, 2024

விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை

image

மக்களவைத் தோ்தல் முடிந்த பின்பு, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சா் உதயநிதி கூறியுள்ளார். “மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு 1.60 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 1.17 கோடி மகளிருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இது பெரிய திட்டமாக இருப்பதால் குறைகள் விரைவில் சரி செய்யப்பட்டு, விடுபட்ட அனைவருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும்” என்றாா்.

News April 3, 2024

நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே இலக்கு

image

RCBக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 2 போட்டிகளில் 2 ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது நல்ல உணர்வை கொடுப்பதாக அவர் கூறினார். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்றும், அந்தப் பயணத்தில் இது வெறும் தொடக்கம் என்று உணர்வதாகவும் மயங்க் தெரிவித்தார்.

News April 3, 2024

தலைவனுக்கான தகுதியை தளபதி பெற்றுவிட்டார்

image

விஜய் சிறந்த பேச்சாளராக இருப்பதால், அரசியல் கட்சி தலைவருக்கான முதல் தகுதியை அடைந்துவிட்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். மக்களுக்கு என்ன தேவை என்பதை ஒரு தலைவன் புரிந்திருக்க வேண்டும், அதை விஜய் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அவர், விஜய் அரசியலில் அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை பார்க்க மிக ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!