India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் RR அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 31ஆவது போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த KKR அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 224 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய RR அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பட்லர் 107 ரன்கள் எடுத்தார்.
நான் வேண்டுகோள் விடுக்க வரவில்லை. எச்சரிக்கை கொடுக்க வந்துள்ளேன் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், “நல்ல முடிவை எடுத்தால் நாளை நமதாகும். இல்லையெனில் அடுத்த தேர்தல் வருமா? என்பது சந்தேகம் தான். ஏழையின் சிரிப்பின் இறைவனை காணும் திராவிட மாடலை இந்தியாவே பின்பற்ற வேண்டும்” என்றார்.
தண்டனை குறைவாக இருப்பதால், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் பழக்கம் குறையாமல் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும், 2019, 2021ஆம் ஆண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவான வழக்குகள் எத்தனை? குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை? தண்டனை வழங்கப்பட்டவை எத்தனை? என சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது .
லாரன்ஸ் பிஷ்னோய் கதையை முடித்து விடுவோமென மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். 2 தினங்களுக்கு முன் மும்பையில் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சல்மான் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பின்னர் பேசிய ஷிண்டே “அதுபோன்று மீண்டும் நடைபெறாது. ரவுடிக் கும்பல்களின் மோதலை அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
2023-24ஆம் நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் மற்றும் சரக்குகளை கையாண்ட விமான நிலையங்களில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. ஓராண்டில் 3 கோடியே 75 லட்சம் விமான பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதில் 46.70 லட்சம் பேர் வெளிநாட்டு பயணிகள் ஆவர். மேலும், 4 லட்சத்து 39 ஆயிரத்து 524 மெட்ரிக் டன் சரக்குகளை பெங்களூரு சர்வதேச விமான நிலையம் கையாண்டுள்ளது.
ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்கள், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறி சஞ்சரிக்கும். அதன்படி, சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் நுழைந்துள்ளார். இதனால் கடகம், துலாம், மகரம், கும்பம் ராசியினர் பணத்தில் புரளப் போகின்றனர். சொத்துகள் வாங்கும் யோகம், வியாபாரத்தில் லாபம், உழைப்புக்கேற்ற ஊதியம் போன்ற சுப நிகழ்வுகளை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
வாய்ஜாலம் பேசுபவர்களிடம் மக்கள் மயங்கிவிடக் கூடாது என கமல்ஹாசன் கூறியுள்ளார். கோவை பிரசாரத்தில் பேசிய அவர், 80 ஆண்டுகளுக்கு முன் காந்தி, காமராஜர் பின்னால் தனது தந்தை எதற்காக சென்றாரோ அதே காரணத்திற்காக தற்போது நானும் புறப்பட்டிருக்கிறேன் என்றார். மேலும், தமிழகத்தில் இருப்பதைப் போல பிற மாநிலங்களில் தேடிப் பார்த்தாலும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்ற வசதிகள் இருக்காது எனத் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோஸ்ட்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இந்த வீரதீர செயலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். நக்சலிஸம் நாட்டின் தடையாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர், விரைவில் நமது நாடு நக்சல் இல்லாத நாடாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை தேமுதிகவுக்கு உறுதியாக ஒரு மாநிலங்களவை சீட் கேட்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சீட் கேட்பது எங்களது உரிமை. அதைத் தர வேண்டியது கூட்டணிக் கட்சியின் தர்மம் எனப் பேசிய அவர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், அங்கு வாடகைக்கு வீடு பார்க்கத் தொடங்கிவிட்டதாகவும், இந்த முறை அவருக்கே வாய்ப்பு தருவோம் என மக்கள் உறுதியாக கூறியுள்ளதாகவும் பிரேமலதா கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.