India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 39-41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பகல் வேளையில் அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் பரப்புரையில் மறைந்த தலைவர்களை பழிப்பது ஏற்றத்தக்கதல்ல என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து X தளத்தில், ஜப்பானில் நிலநடுக்கம், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்படுவதைப் போல, தேர்தல் பரப்புரை மேடைகளில் தலைவர்களை இழிவாக பேசுவது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், மறைந்த தலைவர்களை பழிப்பது முறையல்ல. சிலர் ரசிப்பர், பலர் வெறுப்பர். மேடை நாகரிகமே தமிழர் பண்பாடு எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் ராதிகா போட்டியிடுகிறார். இதனிடையே பேட்டி ஒன்றில் அவர், எத்தனையோ கட்சிகளில் இருந்து சேரும்படி கேட்டதாகவும், தனக்கு அதில் ஆர்வம் இல்லாததால் சேரவில்லை என்றும் கூறினார். மேலும், திராவிட கட்சிகள் மீது ஈர்ப்பு இல்லாததால் தான் அவற்றை தேர்ந்தெடுக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும், சமகவினர் பலரும் பாஜகவில் இணைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் பாஜகவில் சீட்டு மறுக்கப்பட்ட நடப்பு எம்.பி உன்மேஷ் பாட்டில் கட்சியில் இருந்து வெளியேறினார். இன்று காலை அவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து சிவ சேனாவில் (உத்தவ் தாக்கரே அணி) தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே பாஜக கூட்டணியில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் ஏக்நாத் தலைமையிலான சிவசேனாவும் எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் உன்மேஷின் விலகல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் அனைவரும் அறிந்ததே. இதன் வெற்றியைத் தொடர்ந்து பலரும் ஆண் பிள்ளைகளுக்கான திட்டம் இல்லையா? என கேட்கத் தொடங்கினர். அதற்காக கொண்டு வரப்பட்டதுதான் பொன்மகன் சேமிப்பு திட்டம். இதில் ஆண்டுக்கு ரூ.500 – ரூ.1,50,000 வரை சேமிக்க முடியும். சராசரியாக 7.1% வட்டி வழங்கப்படும். 15 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இந்தத் திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கும் உண்டு.
இராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டியூரில் பிரசாரம் செய்த அவர், குழப்பம் விளைவிப்பதற்காகவே பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்டவர்களை களம் இறக்கியுள்ளதாக தெரிவித்தார். தனக்கு மட்டும்தான் ’ஓ’ இனிஷியல் என நகைச்சுவையாக கூறிய அவர், 6 பன்னீர்செல்வங்களின் ஆசிர்வாதத்தால் தனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது என்றார்.
பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக எம்.பியுமான சுஷில் குமார் மோடி கடந்த 6 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருவதாக கூறியுள்ளார். இதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறிய அவர், மக்களவைத் தேர்தலில் தன்னால் போட்டியிடவோ, பிரசாரத்தில் பங்கேற்கவோ முடியாது என்று தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். தற்போது அவர் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பொய் செய்தியை பரப்புகின்றனர் என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ‘பிரதமர் பேச்சு இலங்கை மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பை தாரைவார்ப்பதை ஏற்க முடியாது’ என விமர்சித்துள்ளார்.
சில்லுன்னு ஒரு காதல் படத்திற்குப் பிறகு 18 வருடங்கள் கழித்து சூர்யா- ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதலை மையப்படுத்தி உருவாக உள்ள இந்த படத்தை, இயக்குநர்கள் ஹலிதா ஷமீம் மற்றும் அஞ்சலி மேனன் இருவரும் இணைந்து இயக்குவார்கள் எனத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. முன்னதாக இந்த ஜோடி 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
கெஜ்ரிவால் உடல் எடை 65 கிலோவில் சீராக இருப்பதாக திகார் சிறை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்ததில் கெஜ்ரிவாலின் உடல்நிலை சீராக உள்ளது. சிறைக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து தற்போது வரை அதே எடையில் இருக்கிறார் என்று சிறை நிர்வாகம் அதிஷியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வீட்டில் சமைக்கப்பட்ட உணவு அவருக்கு வழங்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.