India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட பிரபுதேவா இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய்யின் “The GOAT” படக்குழுவினர் பிரபுதேவாவிற்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படத்தில் பிரபுதேவாவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
நாமக்கல்லில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ₹15 கோடி கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சந்திரசேகர் என்பவர் வீட்டில், பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் – டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்பாடு 11% அதிகரித்து ரூ.9.30 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. மொத்த பரிவர்த்தனைகள் 21% அதிகரித்து 178 கோடியாக இருந்தது. அதே நேரம் ஏடிஎம் கார்டு பயன்பாடு 34% சரிந்து 115 கோடியாக இருந்துள்ளது. கடந்த டிசம்பரில் மட்டும் 9.79 கோடி புதிய கிரெடிட் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 71% தனியார் வங்கி கார்டுகள் ஆகும்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவிற்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை இபிஎஸ் நியமித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதிக்கு மலேசியா எஸ்.பாண்டியன், நிறைகுளத்தான், சாமிநாதன், சிதம்பரம் தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், ராஜமாணிக்கம், வடசென்னை தொகுதிக்கு எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காயம் காரணமாக லக்னோ அணி வீரர் ஷிவம் மாவி, எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நீங்கள் காயத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவீர்கள் என LSG அணி அவருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் இவருக்கு மாற்று வீரரை LSG இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் LSG அணி ஷிவம் மாவியை ரூ.6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விறுவிறுப்பாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஜல்பைகுரியில் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள டீ கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் உப்பின் பங்கு அதிகம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 2 கிராமுக்கும் குறைவாகவே உப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு கிராம் அதிகப்படியான உப்பும் உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை 15% அதிகரிக்கிறது.
ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 17ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏப்.5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விற்கப்படும் என CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுவர் விளம்பரத்திற்கு அனுமதிக்காவிட்டால் ₹1,000 கிடைக்காது என திமுகவினர் மிரட்டுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர், சின்னம் குறித்து வீடுகளின் சுவர்களில் வரைந்து விளம்பரம் செய்வார்கள். அதற்கு அனுமதிக்காத வீடுகளுக்கு ₹1,000 வழங்கப்படாது என பெண்களை திமுகவினர் அச்சுறுத்துவதாகக் கூறிய இபிஎஸ், தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது எனக் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியை அழிக்கும் நோக்குடன் கெஜ்ரிவாலை ED கைது செய்ததாக AAP தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது என வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார். மேலும், தன்னை காவலுக்கு அனுப்பியதை கெஜ்ரிவால் எதிர்க்காததால், அவர் தற்போது தொடர்ந்த மனு பயனற்றதாகிவிட்டது என்பதை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.