India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயற்கை வளங்களை சிலர் அழிப்பதாக குற்றம்சாட்டிய அவர், தேர்தலில் வென்றால் அதை தடுத்து நிறுத்துவேன் எனக் கூறினார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரான அவர் வேலூரில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, கோவையில் ஏப்.12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்கிறார். கோவையில் பாஜக வலுவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், ராகுல், ஸ்டாலினின் கூட்டுப் பிரசாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அதிகாரி சாகு அறிவித்துள்ளார். இதில் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை. மிகவும் குறைந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக திண்டுக்கலில் 39, பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக மதுரையில் 511 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும், புதிய தொழில்நுட்பத்தில் உள்ள மார்க் 3 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு தேர்தல் களம் முற்றிலும் மாறியுள்ளது. 2019 தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என 2 அணிகள் மோதின. ஆனால் இந்த முறை, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக, பாமக, தமாகா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதே போல், சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகிறது. இதனால் இம்முறை 4 முனை போட்டி நிலவுகிறது.
2019 தேர்தலில் கிடைத்த வாக்குகளை வைத்து பார்த்தால், தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் பலவீனமாக உள்ளதாக தேர்தல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த தேர்தலில் திமுக 33.1%, காங்கிரஸ் 12.5%, இ.கம்யூ 2.4%, மா.கம்யூ 2.3%, விசிக 1.2%, இயூமுலீ 1.1% வாக்குகள் பெற்றன. மறுமுனையில் அதிமுக 19.1%, தேமுதிக 2.1%, எஸ்டிபிஐ 0.1% வாக்குகள் பெற்றன. பாஜக 3.6%, பாமக 5.3%, தமாகா 0.5% வாக்குகள் பெற்றன.
திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி பரப்புரை செய்தார். திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து வீடுவீடாக நோட்டீஸ் வழங்கி அவர் ஆதரவு திரட்டினார். இதைத் தொடந்து நால்ரோடு பகுதியில் வாக்கு சேகரித்த அவர், சிபிஎம் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பரப்புரையின் போது பொதுமக்கள் நடிகை ரோகிணியுடன் புகைப்படம் எடுத்தனர்.
காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கிய அதிமுகவுக்கு தனது மாவீரன் மஞ்சள் படை ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். மறைந்த பிறகும் குருவுக்கு வன்னியர் சமூக மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. தற்போது பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில், கனலரசன் அதிமுக பக்கம் சாய்ந்துள்ளார். இதனால், வாக்குகள் சிதறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மகன் ஷிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அம்மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தனித்து போட்டியிடுகிறார். இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்ற தன்னை சந்திக்க அமித்ஷா மறுத்துவிட்டதாக ஈஸ்வரப்பா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாஜகவில் வாரிசு அரசியலுக்கு பாடம் புகட்ட வேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த மக்களவைத் தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையின்கீழ் போட்டியிட்ட அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அப்போது அக்கட்சியில் இருந்த ஓபிஎஸ், இந்த முறை பாஜக அணியில் சுயேச்சையாகவும், டிடிவி தினகரன், பாஜக அணியிலும் போட்டியிடுகின்றனர். ஓபிஎஸ் விலகலால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா, இல்லையா என்பதை தேர்தல் முடிவே தெரியப்படுத்தும்.
உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை படைத்த வெனிசுலாவின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (114) மரணமடைந்துள்ளார். ஜுவான் 1909 மே 27-இல் பிறந்தார். இவர், 11 குழந்தைகளுக்கு தந்தையாவார். 2022 நிலவரப்படி அவருக்கு 41 பேரக் குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022, பிப். 4 அன்று உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை அமைப்பு அவரை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.