India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தன்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பாஜகவிடம் வசதி கிடையாது என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் உலா வந்தது. இதற்கு X பக்கத்தில் பதிலளித்துள்ள அவர், தன்னை விலைக்கு வாங்க முயற்சித்தால் அது அவர்களால் முடியாது என்பதை உணர்வார்கள் எனக் கூறியுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த X பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு 35% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போதைய பாஜக ஆட்சியில் 65% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஐஐடியில் உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்கள் கூட 30% பேர் வேலை இல்லாமல் தவிப்பதாக கூறினார். மேலும், தனிநபர் சராசரி வருவாயில் இந்தியா 120ஆவது இடத்தில் உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில் வங்கிகள் அபராதமாக மட்டும் சுமார் ₹35,000 கோடியை வசூல் செய்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச கட்டணம் இல்லை, எஸ்.எம்.எஸ் சர்வீஸ்கள், கூடுதலாக ஏடிஎம் மையங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு அபராதம் மற்றும் சேவைக் கட்டணமாக இந்தத் தொகை வசூலிக்கப் பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகை இல்லை என்பதற்காக மட்டும் ₹21,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகால திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். காரமடை பிரசாரத்தில் பேசிய அவர், திமுகவில் ஓடாய் உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்காது. அங்கு வாரிசு அரசியலுக்கே முக்கியத்துவம் தருவதாக குற்றம்சாட்டினார். மேலும், நீட் தேர்வை கொண்டு வந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் தற்போது அதனை ரத்து செய்துவிடுவோம் என பொய் பேசி வருவதாக கடுமையாக சாடினார்.
BWF தாமஸ் மற்றும் உபெர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியலை, இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. சீனாவின் செங்டுவில் ஏப்.27 முதல் மே 5ஆம் தேதி வரை நடைபெறும் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக பி.வி.சிந்துவுக்கு இத்தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டை உருவாக்குபவர்கள், நாட்டை அழிப்பவர்கள் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்பு உரிமைகளை காங்கிரஸ், INDIA கூட்டணி உறுதியாக செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் அஜித் கார் விபத்தில் சிக்கியது போன்ற காட்சிகளை ‘விடா முயற்சி’ படக்குழு இன்று காலை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள், இப்படியான ஸ்டண்ட்களை செய்ய வேண்டாம் என்று அஜித்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விபத்துக்கு பின்னர் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதையும் சுட்டிக் காட்டும் ரசிகர்கள், அவருடைய உடல் நலம் குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வீரரை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நேற்று (ஏப்.3) தொடங்கியது. கனடாவின் டொராண்டோவில் வரும் ஏப்.22 வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் பிரக்ஞானந்தா, வைஷாலி, ஹம்பி, குகேஷ், விதித் ஆகிய 5 பேர் பங்கேற்கின்றனர். இன்று நடைபெறும் ஓபன் பிரிவின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, ஈரானிய பிரெஞ்சு வீரரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவை எதிர்கொள்ள உள்ளார்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டும் தான் தடுக்க முடியுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மே.வங்கத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்த விடாமல், திரிணாமுல் அரசு தடுக்கிறது. சந்தேஷ்காலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாக்க முயற்சி செய்கிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ என்றார்.
25 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பதாக ராகுல் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல், நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில், பங்குச்சந்தையில் சுப்ரஜித் இன்ஜினியரிங், ஐ.டி.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், டி.சி.எஸ், பிரிட்டானியா உள்ளிட்ட 25 நிறுவனங்களின், ₹4.30 கோடி மதிப்புள்ள பங்குகளை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.