India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர் ஷுப்மன் கில் அரை சதம் விளாசி அசத்தியுள்ளார். அகமதாபாத் மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணி களமிறங்கிய நிலையில், தொடக்க வீரர் கில் அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போதுவரை அவர் 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்துள்ளார். குஜராத் அணி தற்போதுவரை 18 ஓவர்களில் 166/4 ரன்கள் எடுத்துள்ளது.
வரும் தேர்தலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் நாராயணன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர்களது பொதுக்குழு உறுப்பினர்களிடம் இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டதாகவும் அதில் 99% பேர் பாஜகவுக்கு ஆதரவளிக்க சொன்னதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார். மோடியின் ஆட்சியில் இந்தியா வல்லரசாக திகழும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
அடுத்த 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பறிக்க மும்பை அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலுமே MI அணி தோல்வியை தழுவியது. இதற்கு ஹர்திக்-ரோஹித் இடையிலான பிரச்னையே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த 2 போட்டிகளின் முடிவைப் பொறுத்து MI அணியின் செயல்பாடு மாறலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆவுடையப்பன். அவரது அலுவலகத்தில் பணப் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என கஸ்டமர் கேர் எண்ணிற்கு போன் செய்த 65 வயது முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூகுளில் தேடி குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்த முதியவருக்கு முதலில் ரூ.35 ஆயிரம் மாயமானது. அதனை மீட்க மீண்டும் முயற்சிக்கவே ரூ.3 லட்சத்திற்கு மேல் இழந்துள்ளார். இதனை அவரது மகன் வீடியோ மூலம் வெளியில் கொண்டு வந்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வெள்ளிக் கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம், வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இதுவரை 300 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. குஜராத்-பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வரும் இன்றைய போட்டியில், பஞ்சாப் வீரர் ப்ரார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கில் சிக்ஸர் விளாசினர். அதன் மூலம், இந்தத் தொடரில் இதுவரை 300 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. அதிகபட்சமாக KKR அணி 3 போட்டிகளில் 45 சிக்ஸர்கள், ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் 39 சிக்ஸர்களை விளாசியுள்ளது.
கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ரூ.680-க்கு மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரை எதிர்த்து பாஜக வேட்பாளராக போட்டியிடும் அவர் தனது வேட்புமனுவில், ‘2018-19இல் ஆண்டு வருமானம் ரூ.10.8 கோடி, 2019-20இல் ரூ.4.5 கோடி, 2020-21இல் ரூ.17.5 லட்சம், 2021-22இல் ரூ.680, 2022-23இல் ரூ.5.6 லட்சம்’ என படிப்படியாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்ததால் அவர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதன் காரணமாக அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து சேனா அமைப்பு மனு தாக்கல் செய்தது. அதனை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘முரண்பாடான கொள்கை உடைய நீங்கள் ஒன்று சேரும் போது, தமிழ்நாட்டை காப்பாற்ற நாங்கள் ஒன்று சேரக்கூடாதா?’ என முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ராமதாஸ், பா.ஜ.கவிடம் சரணடைந்திருப்பதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு அன்புமணி, ‘திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே ஒரே கொள்கையா உள்ளது’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.