India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் பேசுகிறார்: இபிஎஸ்
▶அன்புமணி ஒரு அரசியல் பச்சோந்தி: முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் விமர்சனம்
▶2026இல் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி என்பது தான் இலக்கு: அன்புமணி
▶புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி நடக்கிறது: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
▶பாஜகவை திமுக போட்டியாக கருதவில்லை: எம்.பி கனிமொழி
▶மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றார்
மாறுபட்ட நேரங்களில் பல்வேறு வேலையை செய்வோர் 50 வயதை எட்டும் போது, பல்வேறு உடல், மனம் சார்ந்த ஆரோக்கிய குறைபாடுகளை எதிர்கொள்வதாக ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக 7,000 பேரின் தரவுகளை ஆய்வு செய்ததில், தினமும் அலுவலகத்தில் வழக்கமாக நேரத்தில் பணிபுரிவோரை விட, பல்வேறு ஷிப்டுகளில் பணிபுரிவோருக்கு, விரைவிலேயே அதிகளவில் மனச்சோர்வுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
‘நம் பிரச்சினைகளைத் தீர்க்க சினிமாவில் மட்டும்தான் ஹீரோக்கள் வருவார்கள். நிஜத்தில் இல்லை’ என்று இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். தனது இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ படம் குறித்து பேசிய அவர், “நம்மைச் சுற்றி இருக்கும் சமுதாயத்தில் 40% பேர்தான் நல்லவர்கள். மீதம் இருக்கும் 60% பேர் கெட்டவர்கள் தான். அந்த நல்லவர்களை கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்றுபவன் தான் இந்த‘ரத்னம்’” என்றார்.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பஞ்சாப் வீரர் ஷஷாங் சிங், பொறுப்புடன் விளையாடி 61 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். இது பஞ்சாப் அணிக்கு கிடைக்கும் 2ஆவது வெற்றி ஆகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஒவ்வொரு வாரமும் லாட்டரி குலுக்கல் நடைபெறுவது வழக்கம். பிக் டிக்கெட் என்ற பெயர் கொண்ட இந்த லாட்டரியில் இந்தியரான ரமேஷ், 10 மில்லியன் திர்ஹாம்கள் (சுமார் 22 கோடி ரூபாய்) வென்றிருக்கிறார். கத்தாரில் டெக்னீஷியனாக பணிபுரியும் ரமேஷ், 10 நண்பர்களுடன் சேர்ந்து இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்.
ஃபிபா வெளியிட்டுள்ள உலக கால்பந்து அணிகள் தரவரிசையில் இந்திய அணி, 4 இடங்கள் பின்தங்கி , 121ஆவது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் ஆப்கன் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்திருந்தது . ஃபிபா கால்பந்து அணிகள் தரவரிசையில், அர்ஜெண்டினா முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்தடுத்த இடங்களை பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், பிரேசில் நாடுகள் பிடித்துள்ளன.
ஆன்மாவின் கிரகமாக கருதப்படும் சூரிய பகவான் தற்போது மீன ராசியில் நுழைகிறார். ஏற்கெனவே அங்கு புதன், ராகு உள்ளதால் சூரியனின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த வகையில் கடகம், துலாம், தனுசு, மகர ராசியினர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க உள்ளனர். கொடுக்கல் வாங்கலில் தகராறு, பண முடக்கம், தொழிலில் சுணக்கம், பண வரவு இல்லாதது என பல்வேறு சிக்கல்களை இந்த ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
காட்டு ஆடுகளின் எண்ணிக்கை பெருகி வருவதால், அவற்றை தத்தெடுக்க வருமாறு இத்தாலிய தீவு நகரமான அலிகுடி (Alicudi) மேயர் ரிக்கார்டோ குல்லோ மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 5 சதுர கி.மீ தொலைவு கொண்ட தீவில், 100 மக்களுக்கு, 6 மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மனிதர்களுடன் அமைதியாக வாழ்ந்தாலும், தாவரங்கள், பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்கு ஆடுகள் அதிக சேதங்களை விளைவிக்கின்றதாம்.
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக என்னும் டைட்டானிக் கப்பலை, இபிஎஸ் ஓட்டத் தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்குநூறாக ஆக்கிவிட்டாரென பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகர் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ‘இந்தியா நல்லா இருக்க வேண்டும் என்றால் அது மோடி வந்தா தான் நன்றாக இருக்கும் ’ என்றார்.
உடலில் வரக்கூடிய மிக இயல்பான பிரச்னைகளுள் ஒன்று மலச் சிக்கல். ஆனால், இது நாளடைவில் உடலில் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். மலச்சிக்கல் காரணமாக மூல நோய், குத பிளவுகள், குத புற்றுநோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, மலச்சிக்கலை தடுக்கும் வகையில் அதிகப்படியான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.