news

News April 21, 2024

பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

image

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 13ஆவது சுற்றில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான இப்போட்டியில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கருவானா, 89ஆவது நகர்த்தலில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், 8 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறினார் கருவானா.

News April 21, 2024

இந்திய பயணத்தை மஸ்க் ஒத்திவைத்ததன் பின்னணி

image

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், இந்தியாவுக்கு இந்த மாதம் சுற்றுப்பயணமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆண்டின் கடைசிக்கு ஒத்திவைத்துள்ளார். இதற்கு அவர், டெஸ்லா தொடர்பான மிகப்பெரிய கடமைகள் இருப்பதாக காரணம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் தற்போது பொதுத் தேர்தல் நடப்பதாலும், தேர்தலுக்கு பிறகு அமையும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மஸ்க் கருதுவதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

News April 21, 2024

பாஜக மட்டும் தனித்து 350 இடங்களில் வெல்லும்

image

மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் தனித்து 350 இடங்களில் வெல்லும் என்று மூத்த பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கணித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பாஜக மட்டும் 330 முதல் 350 தொகுதிகளில் வெல்லும் என்றும், 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 5% முதல் 7% வரை வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5, கேரளாவில் 2 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 21, 2024

காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்

image

காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று மூத்த பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார். எப்படி நாம் வாக்களிப்பது என்ற தலைப்பில் அவர் புத்தகம் எழுதியுள்ளார். அதுகுறித்து அளித்த பேட்டியின்போது அவர், 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் 2% குறைவான இடங்களை பிடிக்கும் என்றார். எதிரணிக்கு தலைமை இல்லாதது , பின்னடைவு தரும் என்றும் அவர் கூறினார்.

News April 21, 2024

₹150 கோடி வசூலை கடந்தது ‘ஆடு ஜீவிதம்’

image

பிரித்விராஜ், அமலாபால் நடித்த ‘ஆடு ஜீவிதம்’ படம், உலக அளவில் ₹150 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பிளெஸ்சி இயக்கத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியான இப்படம், முதல் நாளிலேயே ₹7.5 கோடி வசூல் செய்தது. உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்திற்காக, நடிகர் பிரித்விராஜ் கடினமாக உழைத்துள்ளார். மேலும், மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலுவைத் தொடர்ந்து 3ஆவது ₹100 கோடி படம் என்ற பெருமையை பெற்றது.

News April 21, 2024

தெற்கிலிருந்து பாஜகவுக்கு அஸ்தமனம் ஆரம்பம்

image

ஆளும் பாஜகவுக்கு தெற்கிலிருந்து அஸ்தமனம் ஆரம்பமாக உள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2019-இல் மோடி செல்வாக்குள்ள நபராக இருந்தபோதே பாஜக 303 தொகுதிகளைத் தாண்டவில்லை. தற்போது மோடியின் அந்தப் பிம்பம் சிதைந்து போய்விட்டது. 400 இடங்கள் வெற்றி என்பது பாஜகவுக்கு கனவாகவே இருக்கும் என்ற அவர், மீண்டும் மோடி பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்தார்.

News April 21, 2024

பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்

image

உ.பியை சேர்ந்த பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் குமார் மாரடைப்பால் காலமானார். அவர் போட்டியிட்ட மொரதாபாத் தொகுதிக்கு முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், அவரது திடீர் மரணம் பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்தது. இதுதொடர்பாக பிரதமர் மோடி, தனது இறுதி மூச்சுவரை பொது மக்களுக்கும், சமூதாயத்திற்கு சர்வேஷ் உழைத்ததாகவும், அவரது மறைவு கட்சிக்கு பெரும் இழப்பு எனவும் இரங்கல் தெரிவித்தார்.

News April 21, 2024

17ஆவது திருமண தினத்தை கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்

image

17ஆவது திருமண தினத்தை கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராதித்யாவுடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படத்தை ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார். 2 பேருக்கும் திருமணமாகி நேற்றுடன் 17 ஆண்டுகள் ஆனது. இதை அபிஷேக் பச்சன், ஆராதித்யா ஆகியோருடன் ஐஸ்வர்யா ராய் கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதேபோல் அபிஷேக் பச்சனும் அந்த படத்தை பகிர்ந்துள்ளார்.

News April 21, 2024

வாக்கு சதவீதம் குறைவுக்கு தேர்தல் ஆணையமே காரணம்

image

வாக்கு சதவீதம் குறைந்ததற்கு தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததே முக்கிய காரணம் என பிரேமலதா தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையம் அசட்டையாக இருந்ததுள்ளது. 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்பதை எளிதாக கடந்து போ முடியாது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்குப்பதிவு குறைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது நிச்சயம் களையப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 21, 2024

சிறையில் பாதி, ஜாமினில் மீதி…

image

INDIA கூட்டணி தலைவர்கள் பாதி பேர் ஜாமினில் வெளியே இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவோம் என ஆரம்பித்த எதிர்க்கட்சிகள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளன. யார் தவறு செய்தாலும் பிடிபடுவார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் ஊழல் செய்யும் போது இதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். தண்டனை அடையும் போது மட்டும் பாஜகவை அவர்கள் குறை கூறுவதாக அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!