India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த நாள் இன்று (ஏப்.5). கிரிக்கெட் மீதான தீராக் காதலால் TTE வேலையை உதறிவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக 2005ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தோனி 148(123) ரன்களை குவித்தார். இந்தப் போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை விட பெரிய ரவுடியை பாஜகவில் சேர்க்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலத்தில் பாமக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘கள்ளச்சாராய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட காந்தி இன்று தமிழகத்தின் அமைச்சராக உள்ளார். சுடுகாட்டுக் கூரை வழக்கில் சிக்கியவர் தற்போது சேலம் திமுக வேட்பாளராக இருக்கிறார்’ என்றார்
பவால், சிச்சோரே ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, அடுத்ததாக ராமாயண கதையை படமாக்கவுள்ளார். இப்படத்தில் யஷ், ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் ஆஸ்கர் வென்ற பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் உடன் இணைந்து நமது ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். மண்டபம் அருகே கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியில் இருந்தபோது, படகில் வந்த மூவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இலங்கையில் இருந்து அவர்கள் தங்கக் கட்டிகளை கடத்தி வந்து மணலி தீவில் கடலுக்குள் வீசிவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த அதிகாரிகள் 10 கிலோ தங்கக் கட்டிகளை மீட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குப்பாண்டாம்பாளையம் பகுதியில் இளைஞர்கள் ஓட்டிவந்த கார், வேகமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில், காரில் இருந்த லோகேஷ், தனசேகர், கவின், சிவா ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என சீமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு கட்டாயமில்லை. மாநிலங்கள் விரும்பினால் தேர்வை நடத்தி கொள்ளலாமென அறிவித்துள்ளது. இதற்கு, நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? என கேள்வி எழுப்பியுள்ள சீமான், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவோம் எனப் பேசுவதே முட்டாள் தனம் என விமர்சித்துள்ளார்.
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான மருந்து விளம்பரங்களால் சர்ச்சையில் சிக்கியுள்ள பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தாலும், சிறைத் தண்டனையும் சந்திக்க நேரிடும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில், முதல் முறை குற்றத்திற்கு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2ஆவது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள், அவரிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விவசாயிகள் சங்கத்தின் ஆதரவு அதிமுக கூடுதல் பலம் சேர்க்கும் என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை என பாஜக விமர்சித்துள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகள் மக்களுக்கு அநியாயங்களை செய்து விட்டு, இப்போது நியாயம் வழங்கப்படுமென கூறுகின்றனர். தேர்தல் அறிக்கையின் சுற்றுச்சூழல் பகுதியில் நியூயார்க் மற்றும் ராகுலுக்கு மிகவும் பிடித்த தாய்லாந்தின் படங்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜக விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.