news

News April 25, 2024

கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரிப்பு

image

நாட்டில் உள்ள கடன் அட்டைகளின் (கிரெடிட் கார்டு) எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2023 மார்ச் மாதம் நாட்டு மக்களிடம் இருந்த கடன் அட்டைகள் எண்ணிக்கை 8.5 கோடியாக இருந்தது. இது 2024 பிப்ரவரி மாதம் 10 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில் 2024 மார்ச்சில் அந்த எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் எச்டிஎப்சி 20%, எஸ்பிஐ 18.5%, ஐசிஐசிஐ 16.6% பங்களிப்பு செய்கின்றன.

News April 25, 2024

மனைவியின் சொத்து மீது கணவருக்கு உரிமை கிடையாது

image

மனைவியின் சொத்து மீது கணவருக்கு உரிமை கிடையாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள பெண் ஒருவர், முன்னாள் கணவரிடம் இருக்கும் தனது ஆபரணங்களைத் திருப்பி அளிக்கக்கோரி தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனைவியின் சொத்து 2 பேரின் கூட்டு சொத்து கிடையாது என்றும், பிரச்னையான நேரத்தில் பயன்படுத்தலாம், ஆனால் திருப்பியளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

News April 25, 2024

தீராத கடன் பிரச்னைகளை தீர்க்கும் பாலாம்பிகை

image

லலிதாம்பிகையின் ஆபரணத்திலிருந்து கலை & ஞானத்தின் குழந்தை வடிவமாக அவதரித்தவள் மனோன்மணி ஸ்ரீபாலாம்பிகை. சாக்த வழிபாட்டில் வாலையாக போற்றப்படும் இவருக்கு வெள்ளிக்கிழமைகளில் மல்லிகை மலர்கள் சமர்ப்பித்து, கற்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து வழிபட திடீர் பண வரவால், தீராத கடன் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றும் வாழ்க்கையில் நல்வழி பிறக்கும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

News April 25, 2024

IPL: பேட்டிங் வரிசையில் முன்னேறிய ரிஷப் பண்ட்

image

குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். தொடக்கம் முதலே சிக்சர், பவுண்டரி என விளாசிய அவர், 88*(43) ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவர்களுக்கான (ஆரஞ்சு கேப்) தரவரிசையில் (342 ரன்களுடன்) 3ஆவது இடத்திற்கும், அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பருக்கான தரவரிசையில் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளார்.

News April 25, 2024

டாஸ்மாக் கடைகளில் இனி கோதுமை பீர்

image

முதல் முறையாக முழுக்க முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட ‘100% வீட் பீர்’ என்ற புதிய பீர் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதேபோல், பிரபல பிராண்ட் ஆன ‘காப்டர்’ தயாரிப்பில், ‘செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத் லெஹர் பீர்’ வகைகள் விற்பனைக்கு வரவுள்ளது. வீட் பீர் ₹190, காப்டர் வகை பீர்கள் ₹160 – ₹170 விலையில் கிடைக்கும்.

News April 25, 2024

மார்ச் மாதம்: கிரெடிட் கார்டுகள் மூலம் ₹1.64 லட்சம் கோடி செலவு

image

கடந்த மார்ச்சில் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு) மூலம் ₹1.64 லட்சம் கோடியை மக்கள் செலவிட்டுள்ளனர். 2023 மார்ச்சில் கடன் அட்டைகள் மூலம் மக்கள், ₹1.37 லட்சம் கோடியை செலவிட்டிருந்தனர். அதை விஞ்சும் வகையில், இந்த ஆண்டு மார்ச்சில் ₹1.64 லட்சம் கோடிக்கு செலவிட்டுள்ளனர். இதில் ஆன்லைனில் மட்டும் ₹1.04 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 2023 மார்ச்சுடன் ஒப்பிடுகையில் 20% அதிகமாகும்.

News April 25, 2024

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

image

தமிழக மின்சார வாரியத்தில் ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அறப்போர் இயக்கம் தனது மனுவில், 2021-23ஆம் ஆண்டுக்கு இடையில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,182.88 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது. இதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.

News April 25, 2024

ஜேஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது

image

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இந்த தேர்வில், ஜனவரியில் 23 பேரும், ஏப்ரலில் 33 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.

News April 25, 2024

பள்ளிகள் திறந்த மறுநாளே விடுமுறை

image

ஜூன் 3இல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே தேதியில் தான் மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. அதாவது ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறந்தாலும், மறுநாளே வாக்கு எண்ணிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே பள்ளிகளை திறக்கலாம் என பெற்றோர், கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News April 25, 2024

IPL: ஆட்டநாயகன் விருது வென்ற ரிஷப் பண்ட்

image

GT-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், DC கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 5 Four, 8 Six என விளாசி 88*(43) ரன்கள் குவித்து அசத்தினார். மேலும், GT வீரர்கள் ஷாருக்கான் மற்றும் திவாட்டியாவின் கேட்சுகளை பிடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக வாங்கும் 2ஆவது ஆட்டநாயகன் விருது இதுவாகும்.

error: Content is protected !!