India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்., வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதி இயற்கைக்கு முரணானது என்று EX மினிஸ்டர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் நிதி கொடுக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கோடி தேவைப்படும். இந்தியாவின் வருவாய் மற்றும் கடனை கணக்கீடு செய்யாமல், மக்களை ஏமாற்றும் வகையில் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதாக விமர்சித்தார்.
கமிஷனுக்காக அமைக்கப்பட்டது I.N.D.I.A. கூட்டணி என்று மோடி விமர்சித்துள்ளார். உ.பி.யில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், I.N.D.I.A. கூட்டணி கமிஷனுக்காக அமைக்கப்பட்டது, ஆனால் பாஜக கூட்டணி மற்றும் தனது அரசு திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டது என்றார். அரசியலை பாஜக பின்பற்றவில்லை, தேசியவாத கொள்கையை பின்பற்றுகிறது என்றும், இதனால் மக்களின் நம்பிக்கை, இதயங்களை வென்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி கோட் லைஃப்’. தமிழில் ‘ஆடு ஜீவிதம்’ என்ற பெயரில் இப்படம் வெளியானது. 5 மொழிகளில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபிஸில் ₹100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதேபெயரில் இப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, சிபிஎம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவதுடன், ஊதியமும் ₹600ஆக உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை அமல்படுத்துவோம், ஹிந்தி மொழித்திணிப்பை எதிர்ப்போம், விவசாய கடன் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் சிறைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. 1995இல் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் & வெடி பொருட்கள் வாங்கிய வழக்கில், லாலுவை கைது செய்ய க்வாலியர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் இந்த நீதிமன்ற உத்தரவு பிஹாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிகாவின் 50ஆவது படமாக 2021 இல் வெளிவந்தது ‘உடன்பிறப்பே’ திரைப்படம். அண்ணன் – தங்கை இடையிலான நெஞ்சை உருக்கும் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் 2ஆம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குநர் இரா.சரவணனுக்கு பெரிய தொகை ஒன்று முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படம் அமேசான் OTT தளத்தில் நல்ல டி.ஆர்.பி. ரேட்டிங்கை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். பின்னர் பேட்டியளித்த அவர், கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆதலால் தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார்.
திமுக எல்.எல்.ஏ. புகழேந்தி மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலன் பாதித்த நிலையிலும் அதனைப்பற்றி சிந்திக்காமல் புகழேந்தி தேர்தல் பணியாற்றினார். மீண்டு வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருந்தேன்; ஆனால், இடி இறங்கியது போல் அவரது மறைவு செய்தி வந்திருக்கிறது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திருச்சி தொகுதியில் பாஜக சார்பில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழகம் வரும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, இன்றிரவு திருச்சியில் வாகன பேரணி செல்ல இருந்தார். இந்நிலையில், நட்டா பங்கேற்கும் வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதலை காரணம் காட்டி இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ஆகஸ்ட் மாதம் ரோபோட் டாக்சியை களமிறக்க போவதாக அறிவித்துள்ளது. உலகில் தற்போது ஓடும் வாகனங்கள் டிரைவர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக ரோபாட் மூலம் இயக்கப்படும் டாக்சியை அறிமுகப்படுத்த விரும்புவதாக மஸ்க் கூறி வந்தார். இந்நிலையில் அவரது எக்ஸ் பக்க பதிவில், ஆகஸ்ட் 8இல் ரோபோட் டாக்சியை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.