India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
*குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம்.
*வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும்.
*லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.
*தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
*வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகளின் விலை 30% வரை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் புவிசார் குறியீட்டை பெற்ற காஞ்சி பட்டு சேலைகள், ஆண்டுதோறும் ₹300 கோடி அளவுக்கு விற்பனையாகிறது. இந்நிலையில் தங்கம், வெள்ளி விலை உயர்வால், ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட பட்டு சேலைகளின் விலை ₹10,000லிருந்து ₹15,000ஆக உயர்ந்துள்ளது. மேலும், அனைத்து ரக பட்டு சேலைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்தைக் கைப்பற்றப் பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகத் திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முதலில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியானாலும் உறுதியாகவில்லை. இந்நிலையில், செவன் ஸ்க்ரீன், பேஷன் ஸ்டுடியோஸ், ஏஜிஎஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தைக் கைப்பற்ற ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள வயநாடு தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட்டு ராகுல் எம்பியானார். அதேபோல் இந்த முறையும் அங்கு அவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் அன்னி ராஜாவும், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்து 6 நாள்கள் கடந்த நிலையில், அடுத்து என்னாகும்? என்கிற பதற்றம் அதிமுக நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வந்த புகார்களைக் கேட்ட இபிஎஸ் அது குறித்து உண்மையை அறிய முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் மூலமாக ரிப்போர்ட் பெற்றாராம். தேர்தல் முடிவு வெளியான பிறகு அக்கட்சியில் சிலரது பதவிகள் பறிபோகும் எனக் கூறப்படுகிறது.
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் ரீ ரிலீசாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 5 நாள்கள் முடிவில், உலகம் முழுவதும் ₹20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரீ ரிலீசாகி ₹20 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை பார்க்கும் போது, இன்னும் ஒரு வாரத்திற்கு படம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்து வெளியானது. இதற்கு விளக்கமளித்த அவர், 2021இல் 8500 கிலோ லிட்டர், 2022இல் 4500 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கிய மத்திய அரசு, தற்போது 2300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக குற்றம்சாட்டினார்.
தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை சசிகலா ஆதரவாளர்கள் வழங்கி வருகின்றனர். அமைப்பின் பெயர், முகவரி ஏதுமில்லாத அந்தப் படிவத்தில் ‘2017இல் என்ன பொறுப்பில் இருந்தீர்கள்?’ போன்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன. கட்சி, சின்னம் என எல்லாம் கைமீறிப் போன பிறகு, சிறையில் இருந்து வந்தபோது செய்திருக்க வேண்டிய வேலைகளை இப்போது செய்து என்ன பயன் என அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர்.
RCB-SRH அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 40 போட்டிகளில், ஹைதராபாத் அணியைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்களது சொந்த மண்ணில் வீழ்ந்துள்ளன. ஏப். 5ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த CSK-க்கு எதிரான போட்டியில், SRH அணி வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் தோற்காத ஒரே அணி என்ற பெருமையைக் கொண்டுள்ளது. RCB பதிலடி கொடுக்குமா?
இந்திராவின் சொத்து அரசுக்கு செல்வதை தடுக்கவே பரம்பரை வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக மோடி சாடியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் முன்பு அமலில் இருந்த பரம்பரை வரியின்படி, யாரேனும் உயிரிழந்தால் அவர் சொத்தின் ஒரு பகுதியை அரசு எடுத்து கொள்ளும் என்று தெரிவித்தார். இந்திரா மறைவுக்குப் பிறகு அவர் சொத்து அரசிடம் செல்வதைத் தடுக்கவே, அந்த வரியை ராஜீவ் ரத்து செய்தார் என்று அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.