India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் ட்விட்டருக்குப் போட்டியாக 2019ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட ‘Koo’ செயலி, தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து மொத்த பணியாளர்களில் 80% பேரை நீக்கம் செய்த நிலையில், தற்போது சுமார் 50 பேர் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கும் 40% சம்பளமே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தற்போது அதையும் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி, கடவுள்களின் பெயர்களை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அதன் மீதான விசாரணை நாளை தொடங்கவுள்ளது. இந்த மனுவில், பிரதமர் மோடி அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு நாட்டின் அரசியல் நகர்வையே மாற்றும் என்பதால் பலரும் இதனை உற்று நோக்கி வருகின்றனர்.
காதலன் சாந்தனுவை நடிகை ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாட்டூ கலைஞர் சாந்தனுவைக் காதலித்த ஸ்ருதி, மும்பையில் அவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாவில் அவரை Unfollow செய்த ஸ்ருதி, அவருடன் எடுத்த போட்டோஸை நீக்கிவிட்டு, “சிலரது உண்மை முகம் இப்போது தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார். இதனால் பிரேக்அப் ஆகிவிட்டதா என ஸ்ருதியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவு டெலிவரி செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்வதற்கான சோதனையில் சொமட்டோடோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தச் சேவை தற்போது பெங்களூரு மற்றும் மும்பையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 16 முதல் 21 நிமிடத்திற்குள் உங்களின் ஆர்டர் கைக்கு வர ரூ.29 கூடுதலாகச் செலுத்த வேண்டும். இந்தக் கூடுதல் கட்டணம் ‘சொமட்டோ கோல்ட்’ சப்ஸ்கிரைபருக்கும் பொருந்தும்.
ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட ஆன்லைன் முதலீடு மோசடியால் பணத்தை இழந்த 4 ஜப்பானியர்கள் 1,48,000 டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடுத்துள்ளனர். பிரபலங்களின் படங்களைப் பயன்படுத்தி மோசடியான விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் பிரபலங்களின் புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மற்ற நாடுகளில் அவர்கள் பேசுவது போன்ற டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி மோசடிக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
உ.பி. பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத் தேர்வுகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவர் ஒருவர் RTI மூலம் பெற்ற தகவலில் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. இன்னும் பல மாணவர்கள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை விடைத்தாளில் எழுதி மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இது தொடர்பாக பேராசிரியர்கள் இருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சுபமுகூர்த்த தினத்தையொட்டி (ஏப்ரல் 26) தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள், குமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களை கொள்முதல் செய்வார்கள். இந்நிலையில், மல்லிகை நேற்று கிலோ ₹300க்கு விற்பனையான நிலையில், இன்று ₹600ஆக உயர்துள்ளது. இதேபோல, பிச்சிப்பூ ₹1500, முல்லை ₹1400, அரளி ₹400, சம்பங்கி ₹300, ரோஸ் ₹200க்கு விற்பனையாகிறது.
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானின் நினைவு நாளையொட்டி, அவரது மகனும் நடிகருமான பாபில் கான் உருக்கமாக பதிவிட்டுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக 2020ஆம் ஆண்டு இர்ஃபான் கான் உயிரிழந்தார். இந்த நிலையில், “சில சமயங்களில் தந்தையிடம் செல்ல வேண்டும் எனத் தோன்றுவதாக” அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, பின்னர் உடனடியாக அதனை நீக்கிவிட்டார். இதைப் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம் வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் கார்கள் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கார்கள் விலையை 2% உயர்த்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவினம் அதிகரிப்பு காரணமாக கார்கள் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஆடி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் SRH, RCB அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள RCB கேப்டன் டு ப்ளஸி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து SRH இன்னும் சற்று நேரத்தில் பவுலிங் செய்ய உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிபெற்றுள்ள SRH புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ள RCB கடைசி இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Sorry, no posts matched your criteria.