India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர், தொகுதி பொருளாளர் என முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சீமானின் மனைவி கயல்விழியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கட்சியின் கட்டமைப்பு தொடங்கி, நிர்வாகம், வேட்பாளர் தேர்வு என அனைத்திலும் அவர் தலையீடு அதிகமாக உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தமிழகத்தில் இன்று பரப்புரை செய்கிறார். காலை 10 மணி அளவில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசும் அவர், அதனை தொடர்ந்து கரூர் வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பேசுகிறார். மாலையில் விருதுநகர் தொகுதியில் ராதிகாவுக்கு ஆதரவு திரட்டும் அவர், இறுதியாக திருச்சியில் தனது பரப்புரையை நிறைவு செய்கிறார்.
ம.பி, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், ம.பி மாநிலம், மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், தாத்ரா-நாகர்ஹவேலியில் அஜித் ராம்ஜிபாய் மகலாவை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.
➤ திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
➤ ஸ்டாலினால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்தது – இபிஎஸ்
➤ கமல் சரித்திரத்தை ஒழுங்காக படிக்க வேண்டும் -வானதி சீனிவாசன்
➤ அதிமுகவுக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு
➤ பாஜகவை நெஞ்சுரத்தோடு முதல்வர் எதிர்க்கிறார் – திருமாவளவன்
➤ ரசிகரை அடித்த நடிகர் ஜாக்கி ஷெராஃப்
➤ பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி
1.தன்னம்பிக்கையற்றவர்கள்d 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6. பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்டவர்கள், 8. கோபம் கொள்பவர்கள், 9. சான்றோரை மதிக்காதவர்கள், 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள். 11. குரு நிந்தனை செய்பவர்கள், 12. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள், 13. பிறர்மனை விரும்புகிறவர்கள், 14 ஆணவம் கொண்டவர்கள்,
பெங்களூருக்கு எதிரானப் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 4வது வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், சென்னை அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஏப்ரல் – 07 | பங்குனி – 25
▶கிழமை: ஞாயிறு
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, 3:30 PM – 4:30 PM
▶கெளரி நேரம்: 01:30 AM – 02:30 AM,
▶ராகு காலம்: 4:30 PM- 06:00 AM
▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM
▶குளிகை: 03:00 AM – 04:30 AM
▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம்
எடப்பாடி பழனிசாமி தனக்கு வாழ்வளித்த அனைவருக்கும் துரோகம் செய்துள்ளதாக டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார். இபிஎஸ் தனது சுயநலத்துக்காக பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளார். தன்னை முதல்வர் ஆக்கிய சசிகலாவுக்கும், தனது ஆட்சியை காப்பாற்ற உறுதுணையாக இருந்த ஓபிஎஸ்க்கு துரோகம் செய்தார் என்று கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி தற்போது உச்சகட்ட அதிகார மமதையில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உடலில் வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். குளிர் காலங்களில் கருப்பு உடை அணிவதால் தவறில்லை. நடைபயிற்சியை விட சிறந்த பயிற்சி உடலுக்கு வேறு எதுவும் இல்லை.
➤வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி புரியாமல் போய்விடும். ➤ சக்தி குறைந்தவர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.
➤நல்லவன் என்று பேர் எடுப்பது மிகவும் சிரம்மமான காரியம். ➤புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.
➤ அனுபவித்த துன்பங்களை நினைவில் கொண்டால்தான் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியும்.
➤சொந்தக் காலில் நிற்பது மட்டுமல்ல, நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.
Sorry, no posts matched your criteria.