India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜயகாந்தை முதல்வராக்காமல் விட்டுவிட்டோமே என மக்கள் இப்போது வருத்தப்படுகிறார்கள் என்று பிரேமலதா உருக்கமாக கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “கேப்டன் எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவரது லட்சியத்தை நிச்சயம் செயல்படுத்துவேன். தேமுதிகவை நன்றாக வழிநடத்தி அவர் கண்ட கனவை எட்டுவதற்கு உழைப்பேன்” என்றார்.
திமுக என்பது அரசியல் கட்சியல்ல; அது கார்ப்பரேட் கம்பெனி என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், “மூன்றாண்டு கால ஆட்சியில், ₹3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ள ஸ்டாலின் தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை. தமிழகத்தில் I.N.D.I.A கூட்டணி இல்லை என்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது. ஊழல் முறைகேடுகள் நிறைந்த ஆட்சியை நடத்தும் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்” என்றார்.
ஏ.சி.சண்முகம், நடிகை ராதிகா போன்றோருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்ய நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடி ஓபிஎஸ்-ஸுக்கு நேரம் ஒதுக்கவில்லையாம். ஏற்கெனவே இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், பாஜக தங்களுக்காக எதையும் செய்யவில்லை என்ற மனக்கசப்பில் இருந்த ஓபிஎஸ்-ஸுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 22ஆவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக தங்களை வஞ்சிக்கிறது என்ற வேதனையில் ஓபிஎஸ் தரப்பு உள்ளதாம்.
ஆர்சிபி வீரர் கோலியை பாக். கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஜூனைத் கான் கிண்டலடித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 67 பந்துகளில் கோலி சதம் அடித்தார். இதன்மூலம் மெதுவாக சதமடித்த வீரர்கள் பட்டியலில் மணிஷ் பாண்டேவுடன் இணைந்தார். இதை சுட்டிக்காட்டி, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மெதுவாக சதம் அடித்ததற்காக கோலிக்கு வாழ்த்துக்கள் என கிண்டலடித்து ஜூனைத் கான் பதிவிட்டுள்ளார்.
பாஜக அரசால் மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறினார். I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு மீண்டும் கம்பீரமாக நடைபோடும் என்று கூறிய அவர், அதிகாரத்தை கைப்பற்ற பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழவுள்ளது. சூரியனை நிலவு கடந்து செல்கையில் பூமியின் மீது விழும் நிழலால் இருள் சூழும். இது சூரிய கிரகணம் எனப்படுகிறது. இது நாளை நிகழவுள்ளது. சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு பிறகு இது நிகழ்கிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இக்கிரகணத்தைக் காண முடியும். இந்தியாவில் காண முடியாது. 2031ல் நிகழும் கிரகணத்தையே இந்தியாவில் காண முடியும்.
ஜப்பான் ஐ.டி.எஃப்., டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் அன்கிதா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. காஷிவா நகரில் நடந்த மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா – தைவானின் சியா டிசாவோ ஜோடி, பிரிட்டனின் புரூக்ஸ் – ஹாங்காங்கின் சோங் ஜோடியுடன் மோதியது. ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியில் அன்கிதா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தங்கப் பதக்கத்தை வென்றது.
பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏ.டி.’ அடுத்த மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவு ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருப்பதால், வெளியீட்டைத் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கெனவே பிரபாஸின் ‘சலார்’ படமும் கிட்டத்தட்ட 4 மாதங்கள் தாமதமாகவே வெளியானது. இப்போது அவரது புதிய படமும் வெளியாக கால தாமதமாகும் எனக் கூறப்படுகிறது.
I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்க உள்ள கதாநாயகன் என்று கூறினார். மக்கள் முன்னேற்றத்திற்காக திமுக, காங்கிரஸ் பாடுபடுவதாக கூறிய அவர், மதத்தின் பெயரால் பிரதமர் மோடி பிரசாரம் செய்வதாக சாடினார்.
திரிணாமுல் காங்கிரஸின் ஊழலால் மேற்குவங்க மக்கள் சலிப்படைந்து இருப்பதாக மோடி விமர்சித்துள்ளார். அவரின் எக்ஸ் பக்க பதிவில், ” ஜபைல்குரியில் இன்று பிரசாரம் செய்ய போகிறேன். அங்கு பாஜகவுக்கு பெரும் ஆதரவு காணப்படுகிறது. திரிணாமுலின் ஊழல், மோசமான ஆட்சி நிர்வாகத்தை கண்டு மேற்குவங்க மக்கள் சலிப்பில் உள்ளனர். அவர்களின் கனவுகளை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும்” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.