India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை வெயிலின் தாக்கத்தால் மக்களிடையே சர்க்கரை நுகர்வு அதிகரித்து வருகிறது. இதனால், அதன் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4.9% வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதத்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு 2 லட்சம் டன் அதிகரித்து, 23 லட்சம் டன்னில் இருந்து 25 லட்சம் டன்னாக உயர்த்தியுள்ளது.
சர்க்கரை விலை கடந்த ஒரு மாதத்தில் 4.5% உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், பழச்சாறுகளின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதன் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் சர்க்கரை விலை மளமளவென உயர்ந்துள்ளது. குறிப்பாக சில்லரை விலையில் சர்க்கரை கிலோ ₹50 தாண்டியுள்ளது. வரும் நாட்களில் தேவைக்கேற்ப விலை உயரும் எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் முக்கிய வீரராக சூர்ய குமார் யாதவ் இருப்பார் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் அவரிடம் இருப்பதாகக் கூறிய யுவராஜ், இந்திய அணி கோப்பையை வெல்ல அவர் முக்கியக் காரணமாக இருப்பார் என்றார். மேலும், விராட் மற்றும் ரோகித் மீது சிலர் விமர்சனங்களை வைத்தாலும் அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘அமரன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிகளைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் சகோதரர்கள் உருவாக்கி வருகின்றனர்.
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுக் காலிச் சொம்பைப் பிரதமர் கொடுத்துள்ளதாக ராகுல் விமர்சித்துள்ளார். பாஜகவை, பாரதிய ஜனதா கட்சி என்பதற்குப் பதில் மோடியின் பாரதிய சொம்பு கட்சி என்று அழைக்கலாம் என்று அவர் விமர்சித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா வந்த மோடிக்கு எதிராக காலி சொம்பைக் காட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தற்போது ராகுலும் சொம்பைக் கையில் எடுத்துள்ளார்.
தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்பட 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் பகல் 12-3 மணி வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வூதியம் என்பது கனவுதான். பெரும்பாலானவர்கள் பணத்தைச் சேமித்து வைத்து விரைவாக ஓய்வுபெற நினைக்கிறார்கள். அப்போது, எவ்வளவு தொகை இருந்தால் பணியில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற கேள்வி எழும். இதற்குப் பொருளாதார வல்லுநர்கள் 25X ஓய்வூதிய விதியைப் பயன்படுத்தக் கூறுகிறார்கள். அதாவது, ஆண்டுச் செலவில் 25 மடங்குத் தொகை கையில் இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்.
பஞ்சாப் அணிக்கு எதிராகக் கொல்கத்தாவின் சுனில் நரைன், பிலிப் சால்ட் ஆகியோர் அரைச் சதம் அடித்துள்ளனர். ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய இருவரும், பஞ்சாப் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். குறிப்பாக சுனில் நரைன் அதிரடி சிக்சர்களை அடித்துப் பஞ்சாப் வீரர்களுக்கு கிலி ஏற்படுத்தினார். 10 ஓவர் முடிவில் KKR அணி விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் எடுத்துள்ளது. நரேன் 71, சால்ட் 59 ரன்கள் எடுத்துள்ளனர்.
சென்னையில், சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் மக்கள் அதை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு அளிப்பவர்களின் பொருட்கள், அவர்களது பெயருடன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அரசு கூறியுள்ளது.
சென்னை மெரினா அருகே உள்ள ஹுமாயூன் மஹால் கட்டடத்தில், 80,000 சதுர அடி பரப்பளவில் சுதந்திர தின அருங்காட்சியம் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் தியாகம், பங்களிப்பை போற்றும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. முன்னதாக விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பை போற்ற, அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.