India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2003இல் வெளியான இந்திப் படமான எல்.ஓ.சி. கார்கில்,₹33 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில், அஜய் தேவ்கன், சஞ்சய் தத், சைஃப் அலி கான், அபிசேக் பச்சன், நாகார்ஜூனா உள்ளிட்ட 33 ஹீரோக்களும், கரீனா கபூர், ராணி முகர்ஜி, ரவீனா தாண்டன் உள்ளிட்ட 10 ஹீரோயின்களும் நடித்திருந்தனர். 4.15 மணி நேரம் ஓடும் இப்படமே, இந்தியாவின் மிக நீளமான படமாக கருதப்படுகிறது. ₹31.60 கோடி வசூலித்து தோல்வியடைந்தது.
தொடர்ந்து 40 வருடங்களாக ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது எம்.பியாக ஓவைசி இருந்து வரும் நிலையில், அவரின் தந்தை 1984 முதல் தொடர்ந்து 6 முறை எம்.பியாக வெற்றி பெற்றுள்ளார். ஓவைசி 2004 முதல் தொடர்ந்து 4 முறை வென்றுள்ளார். இந்த முறையும் ஓவைசி அங்கு போட்டியிட உள்ள நிலையில், அவரை தோற்கடிக்க பாஜக, லதா என்பரை களமிறக்கியுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், ஈரோடு தொகுதியில் தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தி வரும் அமைச்சர் முத்துசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 2 புதிய போர் கப்பல்கள் கட்டப்படுகின்றன. இதுகுறித்து கூறிய இந்திய கடற்படை அதிகாரிகள், 2 துஷில் ரக கப்பல்கள் ரஷ்யாவில் கட்டப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகளை இந்திய கடற்படை உயரதிகாரிகள் அண்மையில் சென்று பார்வையிட்டதாகவும் கூறினர். இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதும் அந்த 2 கப்பல்களும் ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் கடற்படையில் இணைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்
ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்ட மேடையில் வைக்கப்பட்ட பேனரில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பகன் சிங் குலாஸ்தே புகைப்படம் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் கட்சியினர் பிரமாண்ட பேனர் வைத்திருந்தனர். அதில் கார்கே, சோனியா, பிரியங்கா உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் குலாஸ்தே படமும் இருந்தது. இதையடுத்து அந்த படம் உடனடியாக காங்கிரசாரால் மறைக்கப்பட்டது.
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ரஜினி மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவகாரத்து கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும், தேர்தல் கட்டுப்பாடுகள் ஜூன் 4 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, ஏப்.19 வரை மட்டுமே கட்டுப்பாடுகள் என நினைத்த தமிழக மக்கள், வணிகர்களின் தலையில் இடியாக வந்து இறங்கியிருக்கிறது.
சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பட்டாசு வெடிக்கக் கூடாது, அலங்கார வளைவுகள் அமைக்கக்கூடாது, வெறுப்புணர்வை தூண்டும் வகையில், மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் முழக்கம் எழுப்பக் கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும், பேனர், கட் அவுட்டுகள் கண்டிப்பாக வைக்கக்கூடாது, பதாகைகளை ஏந்திச்செல்லகூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று 2 கிரகணங்கள் உள்ளன. இதில் சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு பயணிக்கும்போது ஏற்படும் நிகழ்வாகும். அப்போது சூரிய ஒளி முழுமையாகவோ, லேசாகவோ அல்லது பாதியாகவோ பூமி மீது விழாமல் தடுக்கப்படும். இதனால் சூரிய கிரகணம் 3 வகைபடுத்தப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் ஆண்டுக்கு 2 முதல் 5 முறைகள் வரை ஏற்படும் என சொல்லப்படுகிறது.
அண்டவெளியில் சுற்றும் பூமி, சூரியன் மற்றும் நிலவுக்கு இடையே பயணிக்கையில் சந்திர கிரகணம் நிகழும். அப்போது சூரிய ஒளியை நிலவு மீது விழாமல் தனது நிழலை நிலவு மீது பூமி விழச் செய்யும். இந்த சந்திர கிரகணமானது, ஒரு வருடத்துக்கு 3 முறை ஏற்படும். சூரியன், சந்திரன், பூமி ஆகியவை எவ்வாறு வரிசையாக அமைகின்றன என்பதைப் பொறுத்து, பகுதியளவு சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம் என 2 வகைபடுத்தப்படும்.
Sorry, no posts matched your criteria.