India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தா அணிக்கெதிரான இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய CSK வீரர் ஜடேஜா ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இன்று 2 கேட்ச்களை பிடித்த அவர், ஐபிஎல்லில் 100 கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி (110) முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரெய்னா (109), போலார்ட் (103), ரோஹித் சர்மா (100), ஜடேஜா (100), தவான் (98) ஆகியோர் உள்ளனர்.
பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என பிரதமர் மோடி கூறியதை கிண்டல் செய்யும் விதமாக முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி X தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், இப்போது 400 என்கிறார்கள், மே மாதம் அது 250 ஆக குறையும். ஜூனில் 175 – 200 ஆக இருக்கும். நான் அல்போன்சா மாம்பழத்தின் விலையைக் கூறுகிறேன். எல்லாவற்றையும் அரசியலாக பார்க்காதீர்கள் என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 போட்டிகளில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள்…
*ஜடேஜா(CSK)-36 ரன்கள் (Vs RCB 2021)
*R ஷெப்பர்ட்(MI)-32 ரன்கள் (Vs DC 2024)
*ரிங்கு சிங்(KKR)-30 ரன்கள் (Vs GT 2023)
*ஷ்ரேயஸ் ஐயர்(DC)-28 ரன்கள் (Vs KKR 2018)
*ஹர்திக் பாண்டியா(MI)-28 ரன்கள் (Vs RPS 2017)
*ஆர்ச்சர்(RR)-26 ரன்கள் (Vs CSK 2020)
*டிவில்லியர்ஸ்(RCB)-26 ரன்கள் (Vs PWI 2013)
*ரிஷப் பந்த்(DD)-26 ரன்கள் (Vs SRH 2018)
ஆட்சியில் இருக்கும் போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இழிவுப்படுத்திய இபிஎஸ் தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை என இபிஎஸ் குற்றம்சாட்டினார். இதற்கு, 2003ஆம் ஆண்டு ஒரே கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சி தான் என திமுக விமர்சித்துள்ளது.
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இந்தத் தேர்வுக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் <
ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து 94 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் பரவிவரும் காலரா நோய்க்கு பயந்து மக்கள் அங்கும் இங்கும் இடம் மாறி வருகின்றனர். அதற்காக லைசன்ஸ் இல்லாத படகு ஒன்று 130 பயணிகளுடன் புறப்பட்டது. நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 26 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் எனக் கூறும் பாஜக 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்ததா? என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம், பாஜகவிற்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்காது என விமர்சித்துள்ளார்.
மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க விரும்புவதாக ‘அனிமல்’ படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் அவர், “மைக்கேல் ஜாக்சனாக நடிப்பது யார்? அவருடன் நடிக்க இருப்பவர்கள் யார் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. சரியான ஒரு நடிகன் கிடைத்தால் இந்தப் படத்தை ஹாலிவுட் வரை கொண்டு செல்லலாம்” என்றார்.
தன்னைப் பற்றி கனிமொழி கவலைப்படுவது ஏன் என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தென்சென்னை தொகுதியில் தமிழிசை போட்டியிடும் நிலையில் பாஜகவில் ஆள் இல்லாததால் தான், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் போட்டியிடுவதாக கனிமொழி விமர்சித்திருந்தார். இதற்கு, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை தவிர வேறு யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை. இதற்கு, திமுகவில் ஆள் இல்லாதது காரணமா என தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 137/9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்த KKR அணியில் கேப்டன் ஷ்ரேயஸ் மட்டும் அதிகபட்சமாக 34 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். CSK தரப்பில் ஜடேஜா 3, தேஷ்பாண்டே 3, முஸ்தஃபிசுர் 2, தீக்ஷனா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். CSK அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.