India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் அருமருந்தாக பூண்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் பக்க விளைவுகளைக் காட்டிலும் வெள்ளைப்பூண்டு நல்ல பலனைக் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பூண்டு உடலுக்கு அதிகம் அளிக்கிறது.
காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள். உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். வாழ்க்கையின் ஆக சிறந்த ரகசியம் நேரத்தை திறம்பட கையாள்வதே ஆகும்.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, மத்திய அரசு நிதி தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறது. ஆனால், நிதி ஆதாரத்தை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காக கட்சியை பாஜகவில் இணைத்ததாக கூறினார். மேலும், திராவிட கட்சிகள் இந்த தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்றார்.
ஏப்ரல் – 09 | பங்குனி – 27
▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 AM,
7:30 PM – 8:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM – 01:30 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶ திதி – பிரதமை
திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வனை எதிர்கொள்ள முடியாமல் ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ் படுதோல்வி அடைவார் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பேசினார். அப்போது, பாஜகவில் போட்டியிட வாய்ப்பளித்த 39 பேர் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இந்த சம்பவம் ஒன்றே பாஜக வட இந்தியாவிலும் தோல்வியை சந்திக்கும் என்பதை உறுதிபடுத்துவதாக அவர் கூறினார்.
➤ போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இரு.
➤ எல்லோருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல ஆசை, ஆனால் யாருக்கும் சாகத்தான் விருப்பமில்லை.
➤ முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல், புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
➤ நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
➤ எல்லாம் கடைசியில் சரியாகிவிடும், அப்படி சரியாகவில்லை என்றால் அது கடைசியல்ல.
ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும். வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்க கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். உப்பை தரையில் சிந்தக்கூடாது.
➤1241 – மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் ஜெர்மானியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.
➤1413 – ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக முடி சூடினார்.
➤1440 – கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார்.
➤ 2003 – பாக்தாத் நகரை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர்.
➤ 2013 – ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் வழங்கியுள்ள சின்னம் எங்களிடம் தான் உள்ளது என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஏன் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றார். மேலும், திமுக, அதிமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்கள் என்று யாரும் இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக அருணாச்சல் எப்போதுமே இருந்து வருவதாக தெரிவித்த அவர், அங்கு வளர்ச்சிப் பணிகள் காலை சூரியனை போல மிக வேகமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக அருணாச்சலின் 30 பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியிருந்தது.
Sorry, no posts matched your criteria.