India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக இருக்கும்வரை தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். CNN செய்தி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால் இனி தேர்தலே இருக்காது என்றார். மக்களை திசை திருப்புவதற்காகவே கச்சத் தீவு விவகாரம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாஜகவினர் தோல்வி பயத்தில் உள்ளனர் என்றும் முதல்வர் கூறினார்.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்க, டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பிறருடன் சேர்ந்து கெஜ்ரிவாலும் சதி வேலையில் ஈடுபட்டது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கோர்ட், தற்போதை நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயலில் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது. இந்த வழக்கில் மார்ச் 21ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
‘விடாமுயற்சி’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஆரவிற்கு , அஜித் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் இடையே அஜித் நண்பர்களுடன் பைக் டூர் சென்றார். இதில் நடிகர் ஆரவும் கலந்துகொண்டார். அப்போது ஆரவ் மற்றும் அஜித் இருவரும் நல்ல நண்பர்களானதாகத் தெரிகிறது. இதையடுத்து சமீபத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான ரேஸ் பைக் ஒன்றை அஜித், ஆரவிற்கு பரிசளித்ததாக கூறப்படுகிறது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Z பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அவருக்கு 33 பாதுகாப்பு பணியாளர்கள் அடங்கிய Z பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் 3 ஷிப்டுகளாக அவருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
வரும் நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 – 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38 – 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால் அசெளகரியம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். தொடர்ந்து பல மெகா ஹிட் படங்களை வழங்கி வந்த இவர், திருமணத்திற்கு பிறகு பெரிய சறுக்கலை சந்தித்தார். குடும்ப பிரச்னையால் பல ஆண்டுகள் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் திணறி வந்தார். தற்போது விஜய் உடன் இணைந்து GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது உறவினர் பெண்ணை அவர் 2ஆவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற அந்தஸ்தைப் பெற்று தந்தது பாட்ஷா படம். 1995இல் வெளியாகி வெள்ளிவிழா கண்ட அந்தப் படத்தை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தான் தயாரித்தது. படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி அரசியல் பேசி பரபரப்பை கிளப்பினார். இந்த காரணத்திற்காகவே அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீ பதவியிலிருந்து மட்டுமல்ல கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
1953இல் எம்.ஜி.ஆர் தொடங்கிய ‘MGR Pictures’ தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பாளராக இருந்தவர் வீரப்பன். அவர்தான் ‘நாடோடி மன்னன்’ படத்திற்கான கடன் பத்திரங்களில் எம்.ஜி.ஆரின் சார்பாகக் கையெழுத்திட்டவர். அதிகப்படியான தயாரிப்பு செலவால் தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்ற எம்.ஜி.ஆருக்கு கடிவாளம் போல இருந்து, அப்படத்தையும், நாடோடியாக போக இருந்த அவரையும் மன்னராக ஆக்கினார்.
2012ஆம் ஆண்டு இதே நாளில், கடைசி பந்தில் சிக்சர் அடித்து ரோஹித் ஷர்மா மும்பை அணியை வெற்றி பெற செய்தார். ஹைதராபாத்துக்கு எதிரான இப்போட்டியில், 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. கடைசி 3 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரோஹித் ஷர்மா 6 2 6 என விளாசி அணியை வெற்றி பெற செய்தார். மேலும், மும்பை இந்தியன்ஸ் சார்பாக தன்னுடைய முதல் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
சீனாவில் பணவீக்கம் ஒரு பிரச்னையாக இல்லையென்றாலும், அந்நாட்டின் பொருளாதார மீட்சி பலவீனமாக உள்ளதாக ING வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் லின் சாங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வரலாற்றில் மிக மோசமான நில விலை வீழ்ச்சியின் மத்தியில் சீனா உள்ளது. வளர்ச்சியைத் தூண்டுவதற்கு தீவிரமான கொள்கைகளை அந்நாடு பின்பற்றவில்லை. அதன் பொருளாதாரக் கொள்கை முழுவதும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
Sorry, no posts matched your criteria.