India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா 2 மக்களவைத் தொகுதிகளே உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் தலா 2 மக்களவைத் தொகுதிகளே இருக்கின்றன. அதேபோல், கோவா மற்றும் தாதர் நாகர்ஹவேலி டாமன் டையூ ஆகியவற்றிலும் தலா 2 தொகுதிகளே உள்ளன. ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
உத்தராகண்ட் மாநிலம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நாட்டின் தலைநகரான டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மக்களவையில் உள்ள இடங்கள் எண்ணிக்கையானது, சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேச மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, ஷஷாங்க் சிங் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 6 பவுண்டரி, 1 சிக்சர் விளாசிய அவர், 46*(25) ரன்கள் குவித்து அசத்தினார். ஐபிஎல் ஏலத்தில் தெரியாமல் வாங்கப்பட்ட இவர், அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்குவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
களத்தூர் கண்ணம்மா மூலம் 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக கமல் அறிமுகமானார். இதையடுத்து மேலும் 5 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதில் அறிமுக படமான களத்தூர் கண்ணம்மாவில் அவர், ₹500 சம்பளம் வாங்கியுள்ளார். அந்த படத்தில் அவரின் நடிப்பை பாராட்டி சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசுத் தலைவர் விருதும் வழங்கப்பட்டது. தற்போது கமல், ஒரு படத்துக்கு ₹150 கோடி வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். கைதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மே 5ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு, மாா்ச் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார், மொபைல் எண்ணில் சிக்கல் இருப்பதாக தெரிவித்ததால், நேற்றும் இன்றும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இன்றிரவு 11.50 மணிக்குள் <
“கடவுள் துகள்” எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான இங்கி., விஞ்ஞானி பீட்டர் வேர் ஹிக்ஸ் (94) உடல்நலக் குறைவால் காலமானார். இயற்பியல் துறையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் உலகப் புகழ் அடைந்தார். மேலும், பல்வேறு ஆய்வு கட்டுரைகள், பரிசுகளைப் பெற்று பல சாதனைகளை படைத்த இவர், இளைய விஞ்ஞானிகளுக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்கியவர். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; நீட் விலக்கு அளிக்கப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என உறுதியளிக்க தயாரா என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன் என உறுதியளிக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார், அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என மொத்தமாக 64(37) ரன்கள் குவித்தார். மேலும், பஞ்சாப் வீரர் ஜிதேஷ் ஷர்மாவின் விக்கெட்டை கைப்பற்றி, பந்துவீச்சிலும் அசத்தினார். இது அவரது முதல் ஆட்டநாயகன் விருது ஆகும்.
ரஜினி, ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘படையப்பா’ திரைப்படம், இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான இப்படம், நீலாம்பரி கதாபாத்திரம், ரஜினியின் பன்ச் வசனங்கள், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பட்டையை கிளப்பியது. மேலும், உலகம் முழுவதும் 200 ஃபிலிம்களுக்கு மேல் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு உண்டு.
Sorry, no posts matched your criteria.