India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Sinquefield Cup செஸ் தொடரில், உலக சாம்பியன் குகேஷை முதல் சுற்றிலேயே கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தி உள்ளார். இதன் மூலம், உலக தரவரிசை பட்டியலில், குகேஷை முந்தி பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்துள்ளார். 3 ஆண்டுகளில் பிரக்ஞானந்தா ஒரு கிளாசிக்கல் செஸ் போட்டியில் குகேஷை தோற்கடிப்பது இதுவே முதல்முறை. 8 ரவுண்டுகள் கொண்ட Sinquefield Cup தொடரில், பிரக்ஞானந்தாவுடன் 6 வீரர்கள் 3-வது இடத்தில் உள்ளனர்.
ஓபன் ஏஐ நிறுவனம் மாதம் ₹399 கட்டணத்தில் ChatGPT Go பிளானை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ChatGPT சந்தா மாதம் ₹1,999 ஆக இருப்பதால் பலரும் அதில் இணைய தயங்கிய நிலையில் இந்த மலிவான பிளான் அறிமுகமாகியுள்ளது. இதில் GPT 5, அதிக மெசேஜ் / இமேஜ் அப்லோட் மற்றும் மேம்பட்ட இமேஜ் ஜெனரேஷன், நீண்ட மெமரி, விரிவான ஆய்வுத்தகவல் அணுகல், Projects, tasks, custom GPTs உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் யாருக்கு பதிலாக அவரை அணியில் எடுப்பது என கேள்வி எழுப்பியுள்ளார். ஜெய்ஸ்வாலை தேர்வு செய்யாதது துரதிஷ்டவசமானது என்ற அவர், அபிஷேக் நன்றாக விளையாடுவதால் அவரை சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.
‘கூலி’ படம் 5 நாள்களில் சுமார் ₹450 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என கூறி தணிக்கை வாரியம் A (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும்) சான்று வழங்கியது. இதனால், பலரும் குடும்பத்துடன் படம் பார்க்க முடியாமல் போனது. இந்நிலையில், U/A சான்று கேட்டு ஐகோர்ட்டில் படக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது. U/A சான்று கிடைத்தால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ரயில் பயணத்தின் பெரும் சிக்கலே, மிகப்பெரிய Luggage முட்டைகள் தான். இதைத் தீர்க்க, இந்திய ரயில்வே, விமான பயணங்கள் போல Luggage எடை சரிபார்ப்பு பிறகே, பயணிகளை ரயிலில் அனுமதிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த முறை பிரயாக்ராஜ் டிவிஷனில் சோதனை செய்யப்படவுள்ள நிலையில், குறிப்பிட்ட எடைக்கு மேலே Luggage எடுத்து சென்றால், அபராதம் விதிக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
தவெக 2-வது மாநாடு ஆக.21-ல் நடைபெறவுள்ளது. இது பற்றி தங்கள் கருத்து என்ன என தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, து.ஜனாதிபதி விஷயத்தில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது எனவும், தவெகவே எப்போதாவது தான் அவர்களை பற்றி யோசிக்கிறார்கள். இதில் நாங்கள் யோசிக்க என்ன இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
Overdraft Against Salary வசதி மூலம் வங்கிகள் அவசர கடன் வழங்குகின்றன. இதனை பெற SALARY ACCOUNT இருந்தாலே போதும். உங்கள் மாத சம்பளத்தை பொறுத்து ஒரு குறிப்பிட்ட கடன் வரம்பை வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன. இதனை EMI-ஆக கட்ட வேண்டியதில்லை. குறைந்த வட்டி என்பதால், பணம் இருக்கும்போது செலுத்தலாம். HDFC, AXIS, ICICI உள்ளிட்ட வங்கிகள் கடன் வழங்குகின்றன. முக்கியமான விஷயம் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும்.
‘நாங்க மூனு பேரும் சாகப்போறோம்’ என நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு பிள்ளைகளுடன் ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர், பண்ருட்டியில் குடும்ப பிரச்னையில் ராஜா(40), அவரது மகன் குமரகுரு(12), தன்யஸ்ரீ(7) ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர். மூவரது உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுகின்றனர். தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 என்ற எண்ணை அழையுங்கள்.
2026 தேர்தலுக்காக வலுவான கூட்டணியை அமைக்க ADMK தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ADMK-வுடன் BJP என்ற பெரிய கட்சி மட்டுமே இருப்பதால், வலுவான கூட்டணி இல்லை என்ற விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதனால், விரைவாக PMK, DMDK-வை சேர்க்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். குறிப்பாக, PMK-வில் தந்தை – மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இணைந்து செயல்பட அன்புமணிக்கு தூது அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1935-ல் பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது. அதனை தொடர்ந்து, தனது முதல் ரூபாய் நோட்டாக ரிசர்வ் வங்கி 1938-ல் ₹5 மதிப்பிலான நோட்டை அச்சடித்து வெளியிடப்பட்டது. இந்த நோட்டில் அப்போதைய இங்கிலாந்து அரசர் கிங் ஜார்ஜ் VI இடம்பெற்றிருந்தார். அதே வருடத்தில் ₹10, ₹100, ₹1,000, ₹10,000 நோட்டுகளும் அச்சடித்து வெளியிடப்பட்டன. நீங்க பார்த்த பழைய ரூபாய் நோட்டு எது?
Sorry, no posts matched your criteria.