India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் பொருளாதார அளவில் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தின், உள் மாநில உற்பத்தியை (GSDP) வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை அளவிடலாம். அந்த வகையில் இந்தியாவின் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு, குஜராத், உ.பி., கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் 7 இடங்களில் உள்ளன.
ஆர்சிபிக்கு கோலியை மீண்டும் கேப்டனாக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி எளிதில் வென்றது. அதிக ரன்கள் குவித்தும் ஆர்சிபி அணியால் வெல்ல முடியவில்லை. இதை சுட்டிக்காட்டி, ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில், டு பிளசிஸ் கேப்டனாக இருப்பதால் கோலியால் எதுவும் செய்ய முடியவில்லை, கோலியை கேப்டனாக்கினால் ஆர்சிபி போராடி வெல்லும் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன் ஐடியா கடும் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.16,000 கோடி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ரூ.18,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான FPO வெளியீடு ஏப்ரல் 18 – 22ஆம் தேதி நடைபெறுகிறது. Price Band ரூ.10 – 11ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மொழிகளை விட தமிழ் எந்த வகையிலும் குறைந்தது இல்லை என ராகுல் காந்தி பேசியுள்ளார். நெல்லையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒருபக்கம் பெரியார் போதித்த சமூக நீதி, சமத்துவம் போன்றவை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியைப் போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேஷமும் இருக்கிறது. மோடி ஒரே நாடு, ஒரே மொழி என சொல்கிறார்” என்றார்.
கோயம்புத்தூர் தொகுதியில் பிரசாரப் பணிகள் செய்வதில் இருந்து விலகுவதாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார். வரும் தேர்தலை பாஜக – பாமக கூட்டணியிட்டு சந்திக்கின்றன. கோவையில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடும் நிலையில், அவர்கள் பாமகவை மதிக்கவில்லை என்று கோவை ராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார். கூட்டணி தர்மத்தை விட சுய மரியாதைதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி சாப்பிட்டதற்கு ஆதாரம் கேட்டதும் காங்கிரசார் பின்வாங்கி விட்டதாக மன்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். மணாலியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தாம் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக காங்கிரசார் முதலில் கூறியதாகவும், ஆதாரம் கேட்டதும், அப்படி சொல்லவில்லை என பின்வாங்கி விட்டதாகவும், தனது குணநலன் குறித்த குற்றச்சாட்டிலும் இதேபோல் பின்வாங்கியதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புதமான கண்ணாடியாக தமிழ்நாடு விளங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நெல்லையில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “தமிழ்நாட்டிற்கு வருவதற்கு நான் விரும்புகிறேன். தமிழக மக்கள் மீது அன்பு செலுத்துகிறேன். உலகிற்கு பெரியார், அண்ணா போன்ற ஆளுமைகளை தமிழ்நாடு தந்துள்ளது. தமிழ்நாட்டிற்கும் எனக்கும் அரசியலைத் தாண்டி குடும்ப உறவு உள்ளது” என்றார்.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகளில் இன்று கடும் வீழ்ச்சி காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தைகள் நிஃப்டி, 235 புள்ளிகள் குறைந்து 22,520 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பவர் க்ரிட், ஓஎன்ஜிசி, ஐஓசி ஆகிய பங்குகளின் மதிப்பு அதிகளவு குறைந்தது. அதேநேரம், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே ஆகிய பங்குகளின் விலை ஏறுமுகத்தில் இருந்தது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை வரும் 15ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கவிதாவை நேற்று கைது செய்த சிபிஐ, 5 நாள்கள் விசாரிக்க அனுமதி கோரியிருந்தது. இதற்கு முன்னதாக, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவரை மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.
சென்னை போரூர் அருகே சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி காரில் பயணித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளன. அப்போது அதிக அளவிலான சிமெண்ட் கலவை அவரது காரில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கார் மிகவும் சேதமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.