India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ரூ.54 ஆயிரத்தை கடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.90க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 உயர்ந்து ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுகவின் வாக்கு வங்கியாக மகளிர் கருதப்படுகின்றனர். ஜெயலலிதா மறைவால், அந்த வாக்குகள் கடந்த தேர்தலில் திமுகவுக்கு சென்றதே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமென கூறப்படுகிறது. அந்த வாக்குகளை தக்க வைக்கவே, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், உரிமைத் தொகை திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது. அந்தத் திட்டங்கள், மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை.
உலகளவில் டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில், 4ஆவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் ‘உலகளாவிய வர்த்தக கண்ணோட்டம் & புள்ளியியல்’ அறிக்கையில், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023இல் டிஜிட்டல் சேவை ஏற்றுமதியில், இந்தியா 17% வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதன் மதிப்பு ₹21.42 லட்சம் கோடியாகும். இத்துறையில், சீனா 4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் தைரியஷீல் மோஹிதே பாட்டீல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாதா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிய அவர், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
1980இல் துவங்கப்பட்ட பாஜகவின் முதல் தலைவராக வாஜ்பாய் இருந்தார். இதையடுத்து அக்கட்சி முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் 1984இல் போட்டியிட்டது. இதில் அக்கட்சி வெறும் 2 தொகுதிகளில் வென்றது. குஜராத்தில் ஏ.கே. பாட்டீல் என்பவரும், ஆந்திராவில் ஜங்கா ரெட்டி என்பவரும் வென்றனர். இதுபோல 2 தொகுதிகளில் மட்டுமே வென்று கணக்கை ஆரம்பித்து, தற்போது 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியமைத்துள்ளது.
என்.டி.ஏ கூட்டணியை விட்டு வெளியேறினால், அதிமுகவை இரண்டாக உடைத்து விடுவோமென இபிஎஸ்ஸை பாஜக மிரட்டியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். நாகையில் பேசிய அவர், “இ.டி., ஐ.டி., சி.பி.ஐ., ரெய்டு வரும் என அச்சுறுத்தினர். முக்கியமானவர்களை தூக்கி விடுவோம் என எச்சரித்தனர். அதற்கெல்லாம் அஞ்சாமல், இனி பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் அறிவித்தார்” எனக் கூறினார்
RCB-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சூர்யகுமார் யாதவ் கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய அவர், முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். நேற்றைய போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கி தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என விளாசி அசத்தினார். இதனால் 17 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 52(19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
திமுக குடும்பத்தினரை முன்வைத்து அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, அக்கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தவர் வைகோ. ஆனால் இந்தத் தேர்தலில் தனது மகன் துரையை வேட்பாளராக அவர் களமிறக்கியுள்ளார். இதேபோல் பாமகவும், தருமபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியாவை களமிறக்கியுள்ளது. இதை காணும் மக்கள், அந்த 2 கட்சிகளும் குடும்ப கட்சிகளாக மாறி விட்டதாக விமர்சித்து வருகின்றனர்.
LSG, DC அணிகள் இடையே 26ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைக்கொடுக்கும் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் 3இல் வென்ற LSG அணி அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது. DC அணி ஆடிய 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தை எப்படியாவது வெல்ல வேண்டுமென கடுமையாகப் போராடலாம்.
2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என்றார். 2026இல் தமிழகத்தில் ஆட்சியமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் ஆட்சியமைக்கும் வரை தொண்டர்கள் ஓய மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.