India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் கட்சி தலைமை கேட்டுக் கொண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத வேட்பாளர்களை அவர்களின் சொந்த தொகுதிகளில் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. தேர்தலில் தலைவர்கள் போட்டியிடாததற்கு பல காரணம் கூறப்பட்டாலும், தோல்வி பயமே காரணம் என பொதுவாக கூறப்படுகிறது.
நஸ்லேன், மமிதா பைஜூ நடித்துள்ள ‘பிரேமலு’ (மலையாளம்) திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழியில் வெளியாகியுள்ளது. கிரீஷ் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படம், கடந்த பிப்.15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், ₹130 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?
நஸ்லேன், மமிதா பைஜூ நடித்துள்ள ‘பிரேமலு’ (மலையாளம்) திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழியில் வெளியாகியுள்ளது. கிரீஷ் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படம், கடந்த பிப்.15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், ₹130 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?
தமிழகத்தின் நிதி பற்றாக்குறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் தரவில்லை என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலையைப் பற்றி பேசியதற்கு பதில் கூறிய பிரதமர் வெள்ள நிவாரணம் பற்றி ஏன் பேசவில்லை. தமிழகத்தின் தேவை குறித்து மோடி பேசாமல் இருப்பது ஏன்? தமிழக மக்களை பாஜகவினாரால் இனியும் ஏமாற்ற முடியாது எனக் கூறினார்.
பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை வீரர் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து விராட் கோலி, டு பிளெசிஸ், லோம்ரோர், சௌரவ் சௌவ்ஹான், வைஷாக் ஆகியோரை வீழ்த்தினார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
திண்டுக்கல், பழனி அருகே சத்துணவு பெண் பணியாளருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கர்நாடகாவில் பதுங்கி இருந்த பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். இன்று சிறைக்கு கொண்டு சென்றபோது, அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரை போலீசார், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், தங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவர் விளம்பரமும் செய்கின்றன. காங்., சார்பில் செய்யப்பட்ட சுவர் விளம்பரத்தில் கை சின்னத்துடன் “தேர்தல் 19.4.23” என எழுதப்பட்டுள்ளது. இதைப்பார்த்த எதிர்தரப்பினர், தேர்தல் நாளையே காங்., கட்சி மாற்றிவிட்டதாக கிண்டல் செய்கின்றனர்.
MI-RCB இடையேயான ஐபிஎல் போட்டியில், நடுவர்கள் ஒருதலை பட்சமாக இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பவர் பிளேவில் பெங்களூரு அணி அடித்த பவுண்டரியை ரிவியூ செய்யவில்லை. மும்பை அணி 2 ரிவியூக்களை இழந்த போதிலும், 3ஆவது நடுவரிடம் ரிவியூ கேட்கப்பட்டது. இடுப்புக்கு மேல் போன பந்திற்கு No Ball கொடுக்கவில்லை. இவ்வாறு பல சர்ச்சைகள் எழுந்ததால், நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.
மத்திய கணக்கு தணிக்கை (சிஏஜி) அலுவலக ஆடிட்டர் ஜெனரலை திருப்பியதால், அந்த அமைப்புக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கணக்கு தணிக்கைக்காக சிஏஜியால் அனுப்பப்பட்ட மூத்த அதிகாரியான ஜெய்சங்கரை அவரது பணிக்கே மீண்டும் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தமிழக அரசு திருப்பி அனுப்பி உத்தரவிட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், சிஏஜி உடனடியாக தலையிட வலியுறுத்தியும் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆடிட்டர் ஜெனரல் ஜெய்சங்கரை அவரது பணிக்கே திருப்பி அனுப்பி உத்தரவிட்டது குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியபோது, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023 விதிகளுக்கு எதிராக ஜெய்சங்கர் சில உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், அதனாலேயே ஜெய்சங்கரை திருப்பி அனுப்பி உத்தரவிட்டதாகவும் உதயசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.