India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்தக் கோரி உலக அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. ஜூனில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுவரும் சூழலில், இதனை ஏகாதிபத்திய நாடுகள் நடத்தவுள்ள நாடகம் என ரஷ்ய அதிபர் புடின் விமர்சித்துள்ளார். உலக அமைதிக்கான சுவிஸின் முன் முயற்சி வெற்றிபெற வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், கமல் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர். மேலும், சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், ராம் சரண் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்பட சிலர் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் சிலிண்டர் விலை ₹19 குறைந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் ₹1,930ஆக இருந்த நிலையில் இன்று முதல் ₹19 குறைக்கப்பட்டு ₹1911க்கு விற்பனையாகிறது. இந்த விலைகுறைப்பின் மூலம் சாலையோர, நடுத்தர, டீக்கடைக்காரர்கள், ஹோட்டல் கடைக்காரர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்றதுமே ஒருவித பதற்றத்துக்கு ஆளாகிவிடுகிறோம். ஏனென்றால், கல்யாணத் தடைக்குக் காரணமாகிவிடுகிறது இந்த தோஷம். செவ்வாய் தோஷத்தால் மனம் வாடுவோர், முருகனுக்கு விரதமிருந்து, வல்லக்கோட்டை சுப்பிரமணியன் கோயிலுக்கு சென்று விருட்சிப்பூ சாற்றி, ஆறுமுக விளக்கேற்றி, தேன் கலந்த தினைமாவு படைத்து வணங்கினால் அத்தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்வு செம்மையுறும் என்பது ஐதீகம்.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதில், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி உள்ளிட்ட 490 இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் (இன்ஜினியரிங் படித்தவர்கள்) <
வரும் ஜூன் மாதம் முதல் எமிஸ் (EMIS) இணையதளத்தில் வருகைப் பதிவைத் தவிர, ஆசிரியர்கள் வேறு எந்த பதிவும் செய்ய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பணியைப் பாதிக்கும் எந்தவித பதிவேற்றப் பணிகளையும் மேற்கொள்ளத் தேவையில்லை எனவும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாணவர் மதிப்பீடு, தேர்வு உள்ளிட்ட இணையவழிப் பதிவேற்றங்களை மேற்கொள்ள 14,000 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
CSK-PBKS இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. SRH-க்கு எதிரான முந்தைய போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற CSK அணி, புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியது. பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல 7 அணிகள் போராடி வருவதால், இனி வரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும். பஞ்சாப் உடனான இன்றைய போட்டியில் CSK அணி வெற்றி பெறுமா?
▶வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டி
▶வெயில் சுட்டெரிப்பதற்கு வானில் மேகக் கூட்டங்கள் இல்லாததே காரணம்: ரமணன்
▶பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுகளால் பாஜக தோற்கும்: செல்வப்பெருந்தகை
▶தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா
▶தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
▶IPL: மும்பை அணி தோல்வி
இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படும் பருவகால காய்ச்சலை, பல்வேறு மாநிலங்களில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், இது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவும் வைரஸ் காய்ச்சல் என்றும், இதற்கான வழிகாட்டுதல்கள், நோயாளிகளின் வகைப்பாடு, சிகிச்சை நெறிமுறை போன்றவை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் தண்டனை தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேர்தல் ஆணையம் தளர்வு அளித்திருக்கலாம் எனவும், ஆனால், கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட அனுமதியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.