India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பண நெருக்கடி காரணமாக மனைவி மற்றும் 7 குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜத் கோகர், போதிய வருமானம் இல்லாததால் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர், தனது மனைவி (கவுசர்), 8 முதல் 10 வயதுடைய 4 மகள்கள், 3 மகன்களை கோடரியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை, மேற்குவங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். குண்டுவெடிப்புக்கு முன்பு இருவரும் சென்னையில் ஒரு மாதம் தங்கியுள்ளனர். குண்டுவெடிப்புக்கு பின் கர்நாடகாவிலிருந்து கேரளா சென்று, அங்கிருந்து தமிழகம் வழியாக ஆந்திரா சென்று தலைமறைவான நிலையில், உளவுத்துறை உதவியுடன் என்ஐஏ கைது செய்துள்ளது.
நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை, மேற்குவங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். குண்டுவெடிப்புக்கு முன்பு இருவரும் சென்னையில் ஒரு மாதம் தங்கியுள்ளனர். குண்டுவெடிப்புக்கு பின் கர்நாடகாவிலிருந்து கேரளா சென்று, அங்கிருந்து தமிழகம் வழியாக ஆந்திரா சென்று தலைமறைவான நிலையில், உளவுத்துறை உதவியுடன் என்ஐஏ கைது செய்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் முன்னணி அரசியல் தலைவர்கள் பலர் போட்டியிடவில்லை. மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவருமான நிர்மலா சீதாராமன், கடந்த முறையைப் போல இம்முறையும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை எம்பியாக அண்மையில் சோனியா காந்தி பதவியேற்றார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே, 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மக்களவை எம்பியாக இருந்தார். அதன்பிறகு மாநிலங்களவை எம்பியாக 2020இல் பதவியேற்றார். இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை அவர் தவிர்த்தார். முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப. சிதம்பரம், 1984 முதல் 2014 வரை பலமுறை மக்களவை எம்பியாக இருந்துள்ளார். அதன்பிறகு தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்து வருகிறார்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் கட்சி தலைமை கேட்டுக் கொண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத வேட்பாளர்களை அவர்களின் சொந்த தொகுதிகளில் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. தேர்தலில் தலைவர்கள் போட்டியிடாததற்கு பல காரணம் கூறப்பட்டாலும், தோல்வி பயமே காரணம் என பொதுவாக கூறப்படுகிறது.
நஸ்லேன், மமிதா பைஜூ நடித்துள்ள ‘பிரேமலு’ (மலையாளம்) திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழியில் வெளியாகியுள்ளது. கிரீஷ் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படம், கடந்த பிப்.15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், ₹130 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?
நஸ்லேன், மமிதா பைஜூ நடித்துள்ள ‘பிரேமலு’ (மலையாளம்) திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழியில் வெளியாகியுள்ளது. கிரீஷ் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இப்படம், கடந்த பிப்.15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், ₹130 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?
தமிழகத்தின் நிதி பற்றாக்குறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் தரவில்லை என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலையைப் பற்றி பேசியதற்கு பதில் கூறிய பிரதமர் வெள்ள நிவாரணம் பற்றி ஏன் பேசவில்லை. தமிழகத்தின் தேவை குறித்து மோடி பேசாமல் இருப்பது ஏன்? தமிழக மக்களை பாஜகவினாரால் இனியும் ஏமாற்ற முடியாது எனக் கூறினார்.
பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை வீரர் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து விராட் கோலி, டு பிளெசிஸ், லோம்ரோர், சௌரவ் சௌவ்ஹான், வைஷாக் ஆகியோரை வீழ்த்தினார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.