news

News May 1, 2024

2 ஆண்டுகளில் நக்சல்கள் ஒழிக்கப்படுவார்கள்

image

பாஜக ஆட்சியில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் பிரசாரம் செய்த அவர், சத்தீஸ்கரின் சில பகுதிகளில் நக்சல்கள் இருப்பதாகவும், அவர்களைக் களையெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மோடி 3ஆவது முறையாகப் பிரதமரானால், அடுத்த 2 ஆண்டுகளில் நக்சல்கள் நாட்டிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

News May 1, 2024

இன்று மே தின விடுமுறை

image

ஒவ்வொரு ஆண்டும் மே 1 சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்கள், தொழிலாளர் இயக்க பங்களிப்புகள் இந்நாளில் நினைவு கூறப்படுகிறது. 1967ல் அப்போதைய முதல்வர் அண்ணா, நாட்டிலேயே முதலாவதாக தமிழகத்தில் மே 1-ஐ அரசு விடுமுறையாக அறிவித்தார். 1990 முதல் மத்திய அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் அரசு, தனியார் அலுவலகங்கள் முதல் அமைப்புசாரா தொழிலாளர்கள் வரை இன்று விடுமுறையாகக் கடைபிடிக்கின்றனர்.

News May 1, 2024

இந்தியாவில் தங்கத்தின் தேவை 8% அதிகரிப்பு

image

கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் தங்கத்தின் தேவை 8% அதிகரித்து 136 டன்னாக இருந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 126 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில் 20% உயர்ந்து, ₹63,090 கோடியில் இருந்து, ₹75,470 கோடியாக அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் தேவையைப் பொறுத்தமட்டில், 4% அதிகரித்து 95.5 டன்னாகவும், முதலீடு 19% அதிகரித்து 41 டன்னாகவும் இருந்தது. இதில், RBI 19 டன் தங்கம் வாங்கியுள்ளது.

News May 1, 2024

வெள்ளைப்பூசணி மோர் சர்பத் செய்வது எப்படி?

image

வெயிலில் ஏற்படும் திடீர் மாரடைப்பு பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் வெள்ளைப்பூசணிக்கு உண்டாம். கோடையில் அதிகமாக கிடைக்கும் பூசணியில் மோர் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். நறுக்கி எடுத்த வெள்ளைப்பூசணி, இஞ்சி, கொத்தமல்லி, நெல்லி, கற்றாழை, மிளகாய், பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி, அதில் மோரை ஊற்றினால் சுவையான வெள்ளைப்பூசணி மோர் சர்பத் ரெடி.

News May 1, 2024

துபே தாக்கத்தை ஏற்படுத்துவார்: ப்ளெமிங்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் ஷிவம் துபே தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று CSK அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஷிவம் துபே குறித்து பேசிய அவர், எதிரணியின் ஆட்டத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப விளையாடுவதில், துபே முழுமையான வீரராக திகழ்கிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்” எனக் கூறினார்.

News May 1, 2024

அஜித்குமார் எடுத்த அதிரடி முடிவுகள்

image

*சில விளம்பரங்களில் நடித்த அஜித், பின்னாளில் விளம்பரங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்தார். *தனது பெயரை அரசியல் காரணங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார். *அஜித் ரசிகர் மன்றத்தை அதிரடியாகக் கலைத்தார். *அல்டிமேட் ஸ்டார், தல ஆகிய பட்டங்களைத் துறந்தார். *சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து புது ட்ரெண்ட் உருவாக்கினார். *தனது படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளைத் தவித்தார்.

News May 1, 2024

குருபெயர்ச்சி: இந்த ராசிக்கார்களுக்கு நல்ல நேரம்

image

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சியை அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பார்கள். ஏனெனில், குருவின் பார்வை பட்டாலே கஷ்டங்கள் பறந்துவிடும் என்பார்கள். இன்று மாலை 5.19 மணிக்கு மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடம் பெயர்கிறார். இதனால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய 6 ராசிகளும் நல்ல பலன் பெற உள்ளனர். மற்ற ராசியினர் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

News May 1, 2024

அங்கீகாரத்தை பாஜக தலைமை வழங்கும்!

image

விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடக் கேட்டபோது, தான் மறுத்துவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி விளக்கமளித்துள்ளார். ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த அவர், “குமரி எம்.பி., தொகுதியில், பாஜக மூத்த தலைவர் பொன்னார் போட்டியிட விரும்பும்போது, அவருக்கு வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில், தேர்தலுக்குப் பின் எனக்குரிய அங்கீகாரத்தை பாஜக வழங்குமென நம்பிக்கை உள்ளது”எனத் தெரிவித்தார்.

News May 1, 2024

‘RRR’ படத்தை குறிப்பிட்டு காங்கிரசை விமர்சித்த பிரதமர்

image

‘RRR’ படத்தைக் குறிப்பிட்டு பேசிய மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை ‘RR’ என மறைமுகமாக தாக்கினார். ஜஹீராபாத்தில் பிரசாரம் செய்த அவர், ‘RRR’ படம் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்ததாகவும், ஆனால், ‘RR’ வசூலிக்கும் வரி இந்தியாவை இழிவுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரசும், பிஆர்எஸும் ஊழல் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் என விமர்சித்த அவர், மதுபான வழக்கில் அது உறுதியானதாகக் கூறினார்.

News May 1, 2024

IPL: முஸ்தஃபிசூருக்கு இது தான் கடைசி போட்டி

image

பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, CSK வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கப்பதற்காக, முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், 14 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், அணியில் இருந்து விலகுவது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

error: Content is protected !!