news

News April 12, 2024

பிடித்தது தோசையா? வடையா? என்பது பிரச்னை இல்லை

image

தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி என பேசுவதாக மோடி மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் பிரசாரம் செய்த அவர், மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா? என மக்கள் கேட்பதாக கூறினார். ஏன் ஒரு மொழிக்காகவே எப்போதும் பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

News April 12, 2024

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் வருகிறது AI வசதி

image

தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, அதன் வாட்ஸ்அப், Messenger மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் AI Chatbot வசதியை சோதனை செய்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளர்கள் மூலம் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வசதி செயல்பட்டிற்கு வரும் நிலையில், பிழை திருத்துதல், எடிட்டிங், மொழிபெயர்ப்பு என பல்வேறு வகையில் AI Chatbot பயனாளர்களுக்கு உதவும்.

News April 12, 2024

எட்டாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி

image

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி ஒரு சாதனையை படைத்துள்ளார். இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், 8ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆயுஷ் பதோனி – அர்ஷத் கான் ஜோடி 73* ரன்கள் குவித்தனர். இது ஐபிஎல்லில் 8ஆவது விக்கெட்டுக்கு எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். ரஷித் கான் – அல்சாரி ஜோசப் ஜோடி 88* ரன்கள் எடுத்துள்ளனர்.

News April 12, 2024

டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

image

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் சம்பள உயர்வு அளிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, சிறந்த ஊழியர்கள் 12 – 15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே நேரம், மற்ற ஊழியர்களுக்கு 4.5 – 7% வரை சம்பள உயர்வு இருக்கும். 4ஆவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.12,434 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 12, 2024

அந்தர்பல்டி அடித்த பாமக செயலாளர்!

image

கோவையில் அண்ணாமலை வெற்றி பெற பாமக முழு மூச்சுடன் களப்பணி செய்யுமென கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவையில் பாமகவுக்கு வேட்புமனு, தேர்தல் அலுவலகம் திறப்பிற்கு அழைப்பில்லை என்பதால் தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் நிர்வாகி ராஜ் அறிவித்திருந்தார். கூட்டணி தர்மத்தை விட சுயமரியாதை முக்கியம் என ராஜ் கூறிய நிலையில், ஒரே நாளில் ‘அந்தர்பல்டி’ அடித்துள்ளார்.

News April 12, 2024

மோடியின் மனதில் இருப்பதெல்லாம் இதுதான்!

image

நாட்டு மக்களை இந்து, முஸ்லிம் என மதத்தின் பெயரால் பிரிப்பது மட்டுமே மோடியின் மனதில் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் முத்திரைக் கொண்டது என்ற பிரதமரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், காங்கிரஸ் அறிவித்துள்ள திட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும்தானா என்றார். அவர்களே முஸ்லிம் லீக் உடன் இருந்தவர்கள்தான். வரலாறை மோடி படிக்க வேண்டும் என்றார்.

News April 12, 2024

வேகமாக பரவிவரும் உயிர் பறிக்கும் தொற்றுக் கிருமி

image

கக்குவான் இருமல் நோய் பரவல் காரணமாக சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. போர்டெடெல்லா பெர்டுசிஸ் என்ற தொற்றுக்கிருமியின் வாயிலாக பரவும் இருமல், பெரும்பாலும் குழந்தைகளையே தாக்குகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது. பெர்டுசிஸால் சீனாவில் 32,380 பேர் பாதிக்கப்பட்டும் 13 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

News April 12, 2024

“சீனாவுக்கு சென்று விடலாமென்று இருக்கிறேன்”

image

அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்கள், சீனாவுக்கு வர பாஸ்போர்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அருணாச்சல பிரதேசம் சென்று சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன் என சீமான் விரக்தியுடன் பேசியுள்ளார். ஆரணியில் நாதக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “கத்தி கத்தி போராடிவிட்டேன். மாற்றம் ஏற்படவில்லை. பாஸ்போர்ட் இருந்தால், எனது 2 பிள்ளைகள், மனைவியுடன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பேன்” என்றார்.

News April 12, 2024

தாய், 3 குழந்தைகள் சடலமாக மீட்பு

image

ஜெயங்கொண்டம் அருகே வளவனேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜா வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். அவருடைய மனைவி பானுமதி மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களாக வீடு பூட்டிக் கிடந்தது கண்டு சந்தேகமடைந்த அடுத்த வீட்டினர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, 4 பேரும் இறந்து கிடந்தனர். கொலையா தற்கொலையா என்று விசாரணை நடக்கிறது.

News April 12, 2024

ஓலா, ஊபெரில் இனி ஏசி கிடையாது

image

ஓலா, ஊபெர் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து டாக்ஸி ஓட்டுபவர்கள் இனி ஏசி போட மாட்டோம் என்று முடிவு செய்திருக்கின்றனர். சென்னை நகருக்குள் வாகனம் ஓட்ட கிலோ மீட்டருக்கு சராசரியாக ₹16 முதல் ₹18 செலவாவதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர். ஆனால், ஓலா, ஊபெர் போன்ற நிறுவனங்கள் ₹12 மட்டுமே கொடுப்பதால் நஷ்டம் ஏற்படுவதாக டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

error: Content is protected !!