India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதிரடியாக விளையாடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அரைசதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், 12 புள்ளிகளுடன் 3ஆவது முன்னேறியது லக்னோ அணி.
1917 புரட்சி மூலம் ரஷ்யாவில் உலகின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர்ந்தது. பிறகு ரஷ்யா தலைமையில் உருவான சோவியத் யூனியன் மூலம் கம்யூனிஸ்ட் கொள்கை பரப்பப்பட்டு, புதிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசு மலர்ந்தது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு, ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது. எனினும், சீனா, வடகொரியா, கியூபா, வியட்நாம், வெனிசுலா, லாவோசில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.
பாகிஸ்தானின் தற்போதைய நிலைக்கு யார் பொறுப்பேற்பது? என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மவுலானா பசுலுர் ரகுமான் வினவியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர், ‘1947ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒரே நேரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. இன்று இந்தியா ‘சூப்பர் பவர்’ நாடாகக் கனவு காண்கிறது. ஆனால் நாம் நாடு திவாலாவதைத் தவிர்க்க நிதியுதவி கேட்டு வருகிறோம்’ எனச் சோகத்துடன் பேசியுள்ளார்.
ஜோதிட பஞ்சாங்கத்தின்படி நாளை குரு பெயர்ச்சி நடக்கிறது. இதனால் மேஷம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு குபேர ராஜயோகம் காத்திருக்கிறது. குறிப்பாக, மேஷ ராசியினருக்கு வீடு, வாகனம், வேலை என செல்வம் வந்து சேரும். கடக ராசியினருக்கு இதுவரை இருந்து வந்த கண்டங்கள் விலகி ஓடும். சிம்ம ராசியினர் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்க உள்ளனர். கன்னி ராசியினருக்கு நினைத்த காரியம் கைகூடி மகிழ்ச்சி பொங்கும்.
கடலுக்கு அடியில் செல்லும் கேபிள் சேதமடைந்ததால், பாகிஸ்தானில் இணைய தள சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர்-பாகிஸ்தான்-ஐரோப்பாவை இணைக்கும் கேபிள், கடலுக்கு அடியில் செல்கிறது. இந்த கேபிள், 5 இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் இணைய தள சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணி முடிந்து, இணைய தள சேவை மீண்டும் இயல்புக்கு வர ஒரு மாதம் ஆகும் எனக் கூறப்படுகிறது.
தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை வலுப்படுத்த பாடுபட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜகவின் X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினோம். முத்தலாக்குக்குத் தடை விதித்தோம். சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தோம். ராமர் கோயிலைக் கட்டினோம். ஆனால் காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறி வருகிறதென விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர், ஈரோட்டில் வெயில் அதிகமாக இருக்கும். இதேபோல, கோவை, நாமக்கல் உள்பட 10 மாவட்டங்களில் வழக்கமான அளவைவிட வெயில் சற்று அதிகரித்துக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்களை எல்ஐசி கிளைகள் புதுப்பிக்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேஒய்சி விவரங்களை அருகிலுள்ள கிளைகளுக்குச் சென்று புதுப்பிக்கும்படி எல்ஐசியிடம் இருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதன்படி, அருகில் உள்ள கிளைக்குச் சென்று விண்ணப்பித்தால், அவர்கள் பாலிசி எடுத்துள்ள கிளைகளுக்குச் செல்லும்படி கூறி, அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் 4 வேட்பாளர் பெயர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. குர்கான், காங்க்ரா, ஹமிர்பூர், வடக்கு மும்பை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா ஹிமாச்சலின் காங்க்ரா தொகுதி வேட்பாளராகவும், ராஜ் பப்பர் அரியானாவின் குர்கான் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரத்துக்குப் பிறகு மகாத்மா காந்தி விடுத்த கோரிக்கையை காங். தலைவர்கள் நிராகரித்து விட்டதாக ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், 1947இல் சுதந்திரம் அடைந்தபிறகு, நாட்டில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதால், காங்கிரசைக் கலைத்து விடும்படி காந்தி கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். ஆனால் அந்தக் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்காமல் நிராகரித்து விட்டதாகவும் ராஜ்நாத் சிங் சாடினார்.
Sorry, no posts matched your criteria.