India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், 2 நாடுகளின் படைபலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் ராணுவத்தில் 6.10 லட்சம் பேர் பணியிலும், 3 லட்சம் பேர் காத்திருப்பிலும் உள்ளனர். இஸ்ரேல் தரைப்படையில் 1.70 லட்சம் பேர் பணியிலும், 4.10 லட்சம் பேர் காத்திருப்பிலும் உள்ளனர். ஈரானிடம் 2,842 டாங்கிகளும், இஸ்ரேலிடம் 1,650 டாங்கிகளும் உள்ளன.
ஈரானிடம் 3,555 கவச வாகனங்களும், இஸ்ரேலிடம் 6,135 கவச வாகனங்களும் உள்ளன. ஈரான் கடற்படையிடம் 272 போர் கப்பல்களும், இஸ்ரேலிடம் 74 போர் கப்பல்களும் உள்ளன. ஈரானிடம் 19 நீர்மூழ்கி கப்பல்களும், இஸ்ரேலிடம் 6 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ஈரான் விமானப்படையிடம் 973 விமானங்களும், இஸ்ரேலிடம் 618 விமானங்களும் உள்ளன. ஈரான் விமானப்படையிடம் 519 ஹெலிகாப்டர்களும், இஸ்ரேலிடம் 128 ஹெலிகாப்டர்களும் உள்ளன.
ஈரான், இஸ்ரேலிடம் அதிநவீன ஏவுகணைகள், டிரோன்கள் உள்ளன. ஈரான் அணுஆயுதத்தை தயாரிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை அந்த நாடு மறுத்து வருகிறது. இஸ்ரேலிடம் அணுஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை அந்த நாடு மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை. இந்நிலையில் 2 நாடுகளுக்கும் இடையே போர் மூண்டு, நட்பு நாடுகளும் அதில் தலையிட்டால்,3ஆம் உலகப் போர் உருவாகி பேரழிவு ஏற்படும். இதனை உலகம் நிச்சயம் தாங்காது.
தனக்கும் நடிகை அஞ்சு குரியனுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், நடிகர் தர்ஷன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருவருக்கும் திருமணமானது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், அது புது ஆல்பம் பாடல் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கார்த்திக் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் இந்தப் பாடலுக்கு, ‘எண்டே ஓமனே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்த நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை, அனைவரும் ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அம்பேத்கரை போற்றி அவர் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம். சாதி – சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்குகிறார் என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், திமுக, அதிமுக, பாஜக என மூன்று பெரும் கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரத்துடன் நிறுத்திவிடாமல், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு பணத்தை வாரி செலவழித்து வருகின்றன. அத்துடன், முக்கிய யூட்யூபர்களிடம் ஆதரவாக கருத்து தெரிவிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சிஏஏ, புதிய வேளாண் சட்டம், உதய் மின் திட்டம் போன்ற மத்திய பாஜக அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த இபிஎஸ்ஸை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பாஜக கூறியவுடன் உடனே டெல்லிக்கு ஓடிச் சென்று ஆதரவு தந்தவர். பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ள இபிஎஸ்ஸின் செயலை இனியும் மக்கள் நம்ப ஏமாளிகள் அல்ல என விமர்சித்துள்ளது.
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். லக்னோ அணி பேட்டிங் செய்த போது, 4வது ஓவரை இஷாந்த் ஷர்மா வீச அதனை படிக்கல் எதிர்கொண்டார். அப்போது ஒரு பந்து படிக்கல்லுக்கு லெக் சைடில் சென்றது. கள நடுவர் அதற்கு வைடு (Wide) கொடுத்தார். அதற்கு பண்ட் ரிவியூ கேட்டார். ரிவியூவிழும் வைடு என வந்ததால், கோபமடைந்த பண்ட் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘THE GOAT’. செப்.5ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, படத்தின் முதல் பாடல் ஏப்.14ல் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், ‘நாளை சம்பவம் உறுதி’ என பதிவிட்டுள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி குடும்ப அரசியல் செய்யவில்லை, நாட்டு மக்களை குடும்பமாக பார்ப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நீலகிரியில் எல்.முருகனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான அனைத்தையும் பிரதமர் மோடி செய்து வருவதாக கூறினார். சுய உதவி குழுக்களில் உள்ள அனைத்து பெண்களும் பயனடையும் வகையில் மோடி கேரண்டி மூலம் கடன் வழங்கப்படுவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.