India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வழங்கப்படும் என RJD கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றுள்ள RJD தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அக்னிவீர் திட்டம் நிறுத்தப்படும், பீகார் மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், சிலிண்டர் ₹500க்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே போட்டி நிலவியபோது, பாஜக மேலிடம் தலையிட்டு பரஸ்பரம் சமாதானப்படுத்தி வந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றமே இபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரனிடம் அதிமுக செல்லும் என கூறியுள்ளார். இதை வைத்து, அவர் பக்கம் பாஜக சாய்ந்து விட்டது என்ற எண்ணம் அரசியல் ஆர்வலர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க, எர்ணாகுளம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தில் ₹7 கோடி முதலீடு செய்த சிராஜ் என்பவருக்கு, லாபத்தில் 40% பங்களிப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதியளித்தனர். படம் ₹200 கோடி வசூலித்த நிலையில், தனக்கு சேர வேண்டிய பங்கு வரவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது.
இன்னும் எத்தனை காலம் காங்கிரசை பாஜக குற்றம்சுமத்தும் என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை, பாஜகவே ஆட்சியில் உள்ளது. அப்படியிருக்கையில் காங்கிரசை பாஜக குற்றம்சுமத்துகிறது என்று தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் எதுவும் நடக்கவில்லை எனில், எப்படி நாட்டில் முன்னணி கல்வி நிறுவனங்கள் வந்தன எனவும் அவர் வினவினார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, திரையுலகில் இன்றுடன் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதை நினைவுகூர்ந்த அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோருடன் எடுத்துத் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற அவர், 2002ஆம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படம் மூலம் நடிகையானார்.
எம்ஜிஆர்-ஐ கருணாநிதி வெளியேற்றியதை போல் ஓபிஎஸ்-ஐ இபிஎஸ் வெளியேற்றி உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஓபிஎஸ்-ஐ ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ராமநாதபுரத்தில் பிரதமருக்கு பதிலாக அவரால் களமிறக்கப்பட்டவர் ஓபிஎஸ் என்று கூறினார். தேர்தலுக்கு பின் ஓபிஎஸ் விஸ்வரூபம் தெரியும் என்றும் மோடிக்கு எப்படி தேர்தல் வேலை செய்வோமோ அதேபோல் ஓபிஎஸ்-க்கு பாஜக கூட்டணி கட்சியினர் செய்வதாகவும் தெரிவித்தார்.
தமிழில் சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த அருந்ததி நாயர் விபத்தில் சிக்கி ஒரு மாதம் ஆகியும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். மார்ச் 14ஆம் தேதி விபத்தில் சிக்கிய அவர் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாள்தோறும் ₹2 லட்சம் வரை செலவு ஆகுவதாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர் நிதியுதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CSK-MI இடையேயான 29ஆவது ஐபிஎல் போட்டி, நாளை இரவு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, இன்று காலை மும்பை வந்தடைந்த சென்னை அணி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தோல்வியில் இருந்து மீண்டுள்ள மும்பை அணி, சொந்த மண்ணில் சென்னையை வீழ்த்துமா? வெற்றியை தொடருமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதே சமயம், பலம் கொண்ட சென்னை அணியுடன் மோதவுள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்?
ஜாஃபர் சாதிக் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாஃபர் சாதிக், அவருக்கு தொடர்புடையவர்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்.9ல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுநீரக பாதை தொற்று ஆண், பெண் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். அதை கீழ்காணும் நடைமுறையை பின்பற்றினால் தடுக்கலாம் * பாக்டீரியாக்களை வெளியேற்ற தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் * சிறுநீர் கழிப்பதை தள்ளி போடக்கூடாது *தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து கொண்ட பழ வகைகளை எடுத்து கொள்ள வேண்டும் * கிரான்பெர்ரி சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதை செய்தால், சிறுநீரக பாதை தொற்று வராது.
Sorry, no posts matched your criteria.