India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிகளுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முன்மொழிந்த 3 பேரை தகுதி அடிப்படையில் ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது. இதற்கு முன்னதாக MD மற்றும் CEO பொறுப்பு வகித்த கிருஷ்ணன் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். டாக்ஸி ஓட்டுநரின் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
மோடி மீண்டும் வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக முதன்மை இடத்தில் இருப்பதாக கூறிய அவர், அதிமுக வெகுதூரம் தள்ளி 2ஆவது இடத்தைப் பிடிக்க போராடி வருகிறது. மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கலாம் என்றார். இந்தியாவின் பொருளாதாரம், மக்களின் அமைதி என மோடி சிதைத்தவைதான் அதிகம் எனக் கூறினார்.
ATMல் சேதமான ₹500 நோட்டுகள் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த நபர் ATMல் ₹10,000 பணம் எடுத்துள்ளார். அவருக்கு சேதமான ₹500 நோட்டுகள் வந்ததையடுத்து, வங்கியில் முறையிட்டு மாற்றியுள்ளார். பலரும் இதுபோன்ற பிரச்னையை சந்திப்பதால் அந்தப் பணம் செல்லுமா? செல்லாதா? என்ற சந்தேகம் எழுகிறது. அந்தப் பணத்தை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இசையமைப்பாளர் தனி ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டால் அது முழுக்க முழுக்க அவருக்கே சொந்தம் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். அதே நேரம், ஒரு படத்திற்காக சம்பளம் பெற்று இசையமைக்கும்போது அந்த பாடலில் சவுண்ட் இன்ஜினியர் தொடங்கி பாடலாசிரியர் வரை பலரின் பங்களிப்பும் இருக்கிறது. சட்டப்படி இசையமைப்பாளருக்கே பாடல் சொந்தம் என்றாலும், தார்மீகப்படி தயாரிப்பாளருக்குதான் சொந்தம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை அனுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த குரோதி வருட புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என அந்த வாழ்த்து அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்தை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். பேருந்தில் இருந்த 9 பேரை கடத்தி சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அதே போல, சாலையில் சென்ற கார் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புளிப்பாக்கப்பட்ட பாலைதான் ‘யோகர்ட்’ என சொல்கிறார்கள். பதப்படுத்தப்பட்ட பாலில் பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. இது தயிரை விட அதிக ஊட்டச்சத்துகள் கொண்டது. தயிரை வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஆனால், யோகர்ட் தயாரிக்க உயிருள்ள பாக்டீரியாக்கள் தேவை என்பதால், தொழிற்சாலைகளில் மட்டுமே தயாரிக்க முடியும்.
ஆட்சியில் இருந்தபோது மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தவிர, காங்கிரஸ் வேறு என்ன செய்தது என்று கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சிக்கு வந்தால் ஹிமாச்சல் பெண்களுக்கு ₹1,500 தருவோம், 5 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என காங்கிரஸ் பொய் வாக்குறுதி அளிப்பதாக குற்றம்சாட்டினார். பொய் வாக்குறுதி அளித்து மக்களை இழுப்பதை எப்போது அக்கட்சி கைவிடும் என்றும் அவர் வினவினார்.
வாட்ஸ் அப் லிங்க் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என பாஜக மோசடி செய்வதாக நெல்லை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு வாக்களித்தால் வாட்ஸ்அப் லிங்க் மூலம் ₹500 கிடைக்கும் என குறுஞ்செய்தி அனுப்புவதாக குற்றம்சாட்டிய திமுக, இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளது.
வரும் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என ‘தி ஹிந்து’ நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், மோடி பிரதமராக வேண்டும் என 48% பேரும், ராகுல் பிரதமராக வேண்டும் என 27% பேரும் வாக்களித்துள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக பலர் வாக்களித்திருந்தாலும், பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக 32% பேர் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.