India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டில் பல ஆண்டு காலமாக நிலவிவரும் வறுமையை ஒழிக்க நடக்கவிருக்கும் தேர்தல் ஒரு வரலாற்று வாய்ப்பு என சீமான் கூறியுள்ளார். திருச்சி பிரசாரத்தில் பேசிய அவர், “இந்தியாவில் உள்ள ஏழை எளிய பாமர மக்களும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது. இந்நிலை இனியும் தொடரக் கூடாது. மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முன்வர வேண்டும்” எனக் கூறினார்.
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலை ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளது. அத்துடன் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி தேநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். பாத்திரத்தில் நெல்லிச் சாறை ஊற்றி கொதிக்க விடவும். அது நன்றாக கொதித்தவுடன் அதில் இஞ்சி, மிளகு தூள் சேர்த்து இறக்கி விடவும். குடிக்கும் சூட்டில் அதனை வடிகட்டி தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம்.
2024 மக்களவைத் தேர்தலை I.N.D.I.A கூட்டணிக்கும் என்.டி.ஏ-வுக்கும் இடையில் நடக்கும் போராக தான் பார்ப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஸ்ரீநகரில் பேசிய அவர், “இந்தப் போர் ஒரு தனிநபருக்கு எதிரானதல்ல, பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரானது. பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம். அதற்கு முடிந்த பங்களிப்பைச் செய்வோம்” என்றார்.
முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், 19 ஆண்டுகளில் முதல் முறையாக ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவை பதிவு செய்துள்ளது. 2004 இல் தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. ஆட்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாத டிசிஎஸ்ஸில் இருந்து 2023-24இல் 13,249 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது டிசிஎஸ்ஸில் 6,01,546 ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
DC அணியின் நிர்வாகத்தில் தான் இருந்திருந்தால் பிரித்வி ஷாவை நிச்சயம் அடித்திருப்பேன் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ரவி பிஷ்னோய் ஓவரில் தேவையில்லாத ப்ரித்வி ஷா ஷாட்டை அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். எப்போதுமே அவர் நன்றாக பேட்டிங் செய்யும்போது ஒரு மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தப் போக்கை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.
*1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். *1699 – கால்சா அறப்படை இயக்கத்தை குரு கோவிந்த் சிங் தோற்றுவித்தார். *1891 – பாபா சாஹேப் அம்பேத்கர் பிறந்த நாள். *1912 – வட அட்லாண்டிக் கடலில் பிரிட்டனின் டைட்டானிக் கப்பல் பனிப்பாறை ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானது. *1950 – ஆன்மிக குரு ரமண மகரிஷி மறைந்த நாள். *2003 – மனித மரபணுத்தொகை ஆராய்ச்சி திட்டம் நிறைவடைந்தது.
இஸ்ரேல் – ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் அமெரிக்கா உள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக, அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்தார்.
‘சூது கவ்வும் – 2’ படம் எடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென விஜய் சேதுபதி வெளிப்படையாக கூறியதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “ஒரு விஷயத்தை கிளாசிக்காக செய்துவிட்டோம். அதை நாம் மீண்டும் தொந்தரவு செய்யக்கூடாது. சூது கவ்வும் படத்தின் 2ஆவது பாகத்தை எடுப்பதில் கருத்தியலாக அவருக்கு உடன்பாடு இல்லை” எனக் கூறினார்.
2023-24 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உட்பட 5,563 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.