India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணி புதிய சாதனை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 212/3 ரன்கள் குவித்தது. இதன் மூலம், T20 கிரிக்கெட்டில் அதிக முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்த (35 முறை) முதல் அணி என்ற பெருமையை சென்னை அணி பெற்றுள்ளது. சோமர்செட் – 34, இந்தியா – 32, பெங்களூரு – 31 முறை பதிவு செய்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
▶நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது: வைகோ
▶ராகுல் காந்தி இந்துக்களை வெறுக்கிறார்: எல்.முருகன் விமர்சனம்
▶காங்கிரஸ் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை: பிரதமர் மோடி
▶மோடி பொய் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்: சித்தராமையா
▶INDIA கூட்டணிக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும்: மம்தா பானர்ஜி
▶IPL: சென்னை அணி வெற்றி
ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், CSK வீரர் தேஷ்பாண்டே அசத்தலாக பந்துவீசியுள்ளார். 3 ஓவர்கள் வீசிய அவர், 27 ரன்கள் கொடுத்து டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, அன்மோல்பிரீத், பேட் கம்மின்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 10 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி, 134 ரன்கள் குவித்து தோல்வியை தழுவியது. இது, நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
காங்கிரஸ் கொடுத்த திட்டங்களை விட, அதிக திட்டங்களை பிரதமா் மோடி தமிழகத்துக்கு கொடுத்துள்ளாா் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த அவர், நிதியை பொருத்தவரை மாநில பேரிடா் நிவாரணத்தை கணக்கிட்டு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு நிதியும், நீதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு படத்தில் இசை பெரிதா? மொழி பெரிதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இசை எவ்வளவு பெரிதோ அதேயளவு மொழியும் பெரிது என்றும், பாட்டுக்கு பெயர் வைப்பது மொழி தான். ஆனால், அதற்கு அழகு சேர்ப்பது இசை என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், இசையும், மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
▶ஏப்ரல் – 29, சித்திரை – 16 ▶கிழமை – திங்கள்
▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 7:30 PM – 8:30 PM
▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM
▶குளிகை நேரம்: 1:30 PM – 3:00 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶திதி: சஷ்டி
▶நட்சத்திரம்: 4:42 AM வரை பூராடம் பிறகு உத்திராடம்
சிறுநீரகங்கள் சரிவர இயங்க, ஒருவா் தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீா் அருந்துவது அவசியம். அதுவே கோடை காலத்தில் அந்த அளவு 60 மி.லி. ஆக தேவைப்படும். 60 கிலோ எடை கொண்ட ஒருவா், கோடை காலத்தில் 3.6 – 4 லிட்டா் வரை தண்ணீா் குடித்தே ஆக வேண்டும். அப்போது தான் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய முடியும். தண்ணீருடன் சோ்த்து இளநீா், மோா், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம்.
ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், CSK கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். தொடக்கம் முதலே பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ், 10 Four, 3 Six என விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தனது 17ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்த அவர், 54 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம், ஹைதராபாத்துக்கு அணிக்கு தக்க பதிலடி கொடுத்தது சென்னை அணி.
அடுத்த பிரதமர் யாராக இருந்தாலும், உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை தனது சாதனையாக பிரதமர் மோடி பேசி வருகிறார் என்றும், 2004இல் 12ஆவது இடம், 2014இல் 7ஆவது இடம், 2024இல் 5ஆவது இடம் என இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் எந்த மாய மந்திரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
✍கூட்டத்தில் நிற்பது எளிதானது. ஆனால், தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.
✍பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அதுபோல முதலில் நீ இரு.
✍நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள்.
✍சிக்கனம் தான் பெரிய வருமானமாகும்.
✍ஒருவனிடம் துக்கமும், தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்
✍மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே.
Sorry, no posts matched your criteria.