India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 18ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை சுட்டிக்காட்டி, ஈரானில் வாழும் இந்தியர்களுக்கு அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், அமைதி காக்கும்படியும், பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது. 2 அவசர கால எண்களை அறிவித்த இந்தியத் தூதரகம், ஈரானிலுள்ள இந்தியர்கள் அனைவரும் தூதரகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், I.N.D.I.A. என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஒரே அணியாக களமிறங்கியுள்ளன. ஆனால் இக்கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 2 மாநிலங்களில் எதிரெதிராக போட்டியிடுகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அங்கு முன்பு ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் தேசிய அரசியலில் இணைந்து செயல்படும் அக்கட்சிகள், மேற்குவங்கத்தில் 2 பிரிவாக பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிடும் நிலை காணப்படுகிறது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, எதிரணியாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் 2 அணிகளும் மாறி மாறி குற்றம் சுமத்துகின்றன. குறிப்பாக பினராயி விஜயன், காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த முரண்பாடான அரசியலை ஏற்கெனவே கண்டதால், காங்கிரசை எதிர்த்து மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அது இம்முறை எதிரொலிக்குமா, மாறுமா என்பது தெரியவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. சமரசம் இல்லாத சேனாதிபதி உயிர்த்தெழ தயாராகிவிட்டார். ஜூன் மாதம் திரையங்குகளில் காண தாயாராகுங்கள் எனக் குறிப்பிட்டு வெளியான அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பணிபுரியும் பெண்களின் விகிதம் 33% என தரவுகள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்காவின் 56.5%, சீனாவின் 60.5% மற்றும் உலக சராசரியான 49%ஐ விட குறைவு. இந்தியப் பெண்களிடையே கல்வி அறிவு மேம்பட்டு இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு பல பெண்கள் வீட்டிலேயே தங்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, உத்தர பிரதேச முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். தேசிய அரசியலில் பிரமாண்ட சக்தியாகவும் திகழ்ந்தார். சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதிகளில் ஒருவராகவும் கருதப்பட்டார். மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த அரசுகள், அவரின் ஆதரவை கேட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் 2024 தேர்தலில், மாயாவதி தீவிர பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எதனால் அவர் ஒதுங்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பாஜக ஆட்சியில் இந்தியாவும் வளர்ச்சி பெறவில்லை, மக்களும் வளர்ச்சி பெறவில்லை என்று கூறிய அவர், மக்களை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி தெரிவித்தார். மேலும் 2019, 2021 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்திக்க பாஜகவே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி, விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. பாஜக தேர்தல் அறிக்கையில் அதுகுறித்தும், வேளாண் கடன் தள்ளுபடி குறித்தும் எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
Sorry, no posts matched your criteria.