India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் இரண்டு சூர்யா இடம்பெற்றிருப்பதால், படத்தில் சூர்யா இரண்டு கேரக்டரில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் எப்படி இருக்கிறது என கமெண்ட் செய்யுங்கள்.
வெயில் காலத்தில் சூடான நீரைக் கொண்டு முகம் கழுவக் கூடாது. இது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கி, வறட்சி, எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். எப்போதும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவுவதுதான் நல்லது. முகம் கழுவும் போது சோப்பை நேரடியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. உள்ளங்கையில் சோப்பைத் தேய்த்து பின்னர் முகத்தில் தேய்ப்பதுதான் சரியானது.
ஈரானுக்கு உரிய பதிலடி அளிக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நிலைகள் மீது நேற்றிரவு ட்ரோன்கள், ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இது குறித்து பேசிய அவர், “எங்களுக்கு தீங்கு செய்வோருக்கு, நாங்களும் தீங்கு விளைவிப்போம் என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். தற்காப்பு மற்றும் எதிர் தாக்குதல் என எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராக உள்ளோம்” என்றார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. டி காக் 10, கே.எல்.ராகுல் 39, ஹூடா 8, ஸ்டாய்னிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து தற்போது வரை LSG 13 ஓவர்கள் முடிவில் 99/4 ரன்கள் எடுத்துள்ளது. பொறுமையாக ஆடிவரும் பதோனி 27, பூரான் 2 ரன்கள் எடுத்துள்ளனர். KKR தரப்பில் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
நடிகர் சாயாஜி ஷிண்டே நலம் பெற்று வருவதாக அப்டேட் வெளியிட்டிருக்கிறார். இரு தினங்களுக்கு முன் நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அப்டேட் வெளியிட்டிருக்கும் அவர், “நான் நலம் பெற்று வருகிறேன். விரைவில் உங்களை மகிழ்விக்க வருவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் எல்.ஐ.சி.யின் முதலீடு ஒரே ஆண்டில் 59% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத கணக்கீட்டின்படி ₹38,471 கோடியாக இருந்த முதலீடு, தற்போது ₹61,210 கோடியாக உயர்ந்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை பொருத்தமட்டில் ₹12,450.09 கோடியிலிருந்து ₹22,776.89 கோடியாகவும், அதானி எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனத்தில் ₹8,495 கோடியில் இருந்து ₹14,305 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா, ஈரானுடன் நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவாக செயல்பட தயங்கமாட்டோம் எனக் கூறியது. இதற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் கடந்தாண்டு 9.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எஃப்.பி.ஐ வெளியிட்ட அறிக்கையில், 2019இல் கொரோனா காரணமாக மக்கள் வீட்டில் இருந்து பணிபுரிய தொடங்கியதால் வீடுகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் குறைய தொடங்கியுள்ளன. அதே நேரம், 2019-2022ஆம் ஆண்டு வரை கடைகள், அலுவலகங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் வெங்கட் மோகன். இவர் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஹண்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.