news

News April 14, 2024

நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன்

image

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி, நெல்லை சென்ற விரைவு ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ப்ளூ டைமண்ட் ஓட்டல் மேலாளர் சதீஷ் உள்ளிட்ட மூவர் கைதாகினர். இதையடுத்து அவர்களது வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 14, 2024

அரை சதம் கடந்தார் சால்ட்

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில், கொல்கத்தா அணி வீரர் சால்ட் அரை சதம் கடந்தார். ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் களமிறங்கிய LSG, 161/7 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. குறிப்பாக பில் சால்ட் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸருடன் இதுவரை 52 ரன்கள் எடுத்துள்ளார். KKR அணி தற்போது வரை 11 ஓவர்களில் 105/2 ரன்கள் எடுத்துள்ளது.

News April 14, 2024

கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் வாரிசு இவரே!

image

கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அண்ணாமலையை தனது அரசியல் வாரிசாக அறிவித்திருப்பாரென நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர், ஜெ., மேல் மக்களுக்கு வந்த நம்பிக்கை போல அண்ணாமலை மேல் நம்பிக்கை வந்திருப்பதாகவும், இந்தி திணிப்பு என சொல்லி ஓட்டு போடவேண்டாமென்று சொல்லும் திமுகவினரின் பிள்ளைகள் இந்தி படித்து வருவதாகவும் சாடியுள்ளார்.

News April 14, 2024

உதயநிதி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

image

ஊட்டிக்கு தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி இன்று ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது, அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, நேற்று ராமநாதபுரத்தில் பிரசாரத்திற்காக அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2024

உடனடியாக உதவிய தவெக நிர்வாகிகள்

image

சென்னை பெருங்குடியில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் குமார் என்பவரது வீடு மின் கசிவு காரணமாக தீக்கிரையானது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அவருக்கு ₹30,000 பணம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தவெக தொண்டர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

News April 14, 2024

‘ரத்னம்’ பட ட்ரெய்லர் நாளை வெளியாகிறது

image

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

News April 14, 2024

தாக்குதல் வெற்றி என்று அறிவித்தது ஈரான்

image

இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் வெற்றியடைந்திருப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. பாலஸ்தீனை தாக்கிவரும் இஸ்ரேல், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஈரான் மீதும் தாக்குதல் நடத்தியது. அதற்கு எதிர்த் தாக்குதலாக இஸ்ரேல் மீது ஏவுகணை மழையை பொழிந்தது ஈரான். இந்த தாக்குதல் வெற்றி பெற்றிருப்பதாகவும், இதனை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

News April 14, 2024

ஐபிஎல்லில் சாஹல் மோசமான சாதனை

image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் போட்டியில் ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாஹல் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 2 சிக்ஸர்களும் விளாசப்பட்டது. இதன்மூலம் ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் (201) விட்டுக்கொடுத்த இரண்டாவது வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார். சாவ்லா (211) முதல் இடத்தில் உள்ளார்.

News April 14, 2024

கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு

image

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 161/7 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே LSG சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. LSG அணியில் அதிகபட்சமாக பூரண் 45, கே.எல்.ராகுல் 39, பதோனி 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். KKR தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

News April 14, 2024

மக்கள் பிரச்னைகளை பாஜக விவாதிக்காது

image

நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்னைகளை விவாதிக்கக்கூட பாஜக தயாராக இல்லை எனக் குற்றம்சாட்டிய அவர், பிரதமர் மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்க மாட்டார்கள் என்றார். மேலும், காங்கிரஸின் கரங்களை வலுப்படுத்த இளைஞர்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!