India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஏப்ரல் – 27 | ▶ சித்திரை – 14 ▶கிழமை: வெள்ளி| ▶திதி: சதுர்த்தி ▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:00 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 09:30 – 10:30 வரை ▶ராகு காலம்: காலை 09:00 – 10:30 வரை ▶எமகண்டம்: பிற்பகல் 01:30 – 03:00 வரை ▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை ▶சந்திராஷ்டமம்: அசுபதி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துன்பத்தை அடிப்படையாக கொண்டது. முதலில் இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
காலையில் உடற்பயிற்சி செய்வதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. உடற்பயிற்சி நடை, நடனம், யோகா என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். காலை உடற்பயிற்சி நம்மை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுவதோடு ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். மூளையின் செயல்திறன் அதிகரிப்பதால் அல்சைமரின் தாக்கம் குறையும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுவதோடு, காலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெறுமென அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பேட்டியளித்த அவர், நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாறு காணாத அளவுக்கு கடன் கொடுத்துள்ளோம். கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
கேரளாவில் பாஜகவுக்கு 10 இடங்கள் கிடைக்குமென பிரதமர் கூறுகிறார். அதில் பூஜ்ஜியம் வேண்டுமானால் கிடைக்கும். பூஜ்ஜியத்துக்கு முன்னால் உள்ள அந்த ஒன்று கிடைக்காதென கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நேற்று வாக்களித்த பின்னர் பேசிய அவர்,‘எல்லா காலத்திலும் வகுப்புவாத கட்சிகளுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு கொண்டது சிபிஎம். ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் பாணி ஆகும்’ என்றார்.
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.50% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், திரிபுராவில் அதிகபட்சமாக 79.46 % வாக்குகளும், குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85% வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தாமரை மலர வேண்டுமென்பது தான் எனது ஆசை என நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மாவும் நடிகையுமான மேனகா தெரிவித்துள்ளார். நேற்று திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள வாக்குச்சாவடியில் மேனகா வாக்களித்தார். பின்னர் பேசிய அவர், ‘புதிய ஆட்சி வந்தால் தானே மாற்றங்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் உணர முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல ஒரு ஆட்சி வரும் என்று என் மனதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.
➤ 1667 – ஜான் மில்டன் தான் எழுதிய ‘பாரடைஸ் லாஸ்ட்’ என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார். ➤ 1981 – PARC முதன்முறையாக கணினிச் சுட்டியை அறிமுகப்படுத்தியது. ➤ 1986 – செர்னோபில் அணு உலை விபத்தை தொடர்ந்து பிரிப்பியாத் நகரத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். ➤ 1994 – தென்னாபிரிக்காவில் முதல்முறையாக கறுப்பினத்தவர் வாக்களித்தனர் ➤ 2005 – ஏர்பஸ் ஏ380 வானூர்தியின் முதல் சோதனை நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் க்ருணால் பாண்டியா – பன்குரி தம்பதிக்கு 2ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 வயதில் கபீர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ஏப்.21ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு, ‘வயு க்ருணால் பாண்டியா’ என பெயரிட்டுள்ளனர். மனைவி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை க்ருணால் பாண்டியா தனது இன்ஸ்டாவில் பகிர வாழ்த்துகள் குவிகிறது.
புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பொதுப்பணிக்கு திரும்ப இருப்பதாக பிரிட்டன் அரச குடும்பம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பொது நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மன்னர் சார்லஸின் உடல்நலம் குறித்து வதந்தி பரவிய நிலையில், இத்தகவலை பிரிட்டன் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.