India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை வெயிலைச் சமாளிக்கத் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு பணி நிறுவனங்களுக்குத் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணி போன்ற வெப்பம் அதிகமாக இருக்கும் துறையில் பணிபுரிபவர்களுக்குச் சுழற்சி முறையில் வேலை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை அவ்வப்போது கண்காணிக்கத் துணை இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த ரோப் கார் சேவைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி செலவில் 200க்கும் மேற்பட்ட ரோப்வே திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இத்திட்டத்தில், மலைப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
பிரதமர் மோடியின் பேச்சுக்களைப் பார்க்கும் போது அவர் மிகவும் பதற்றமாக இருப்பது தெரிவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற பிரதமர் முயல்வார் என்று கூறிய அவர், மக்கள் மோடியிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, இடஒதுக்கீடு, இஸ்லாமியர்கள் விவகாரங்களில் பிரதமரும், ராகுலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. அதில், பிற்பகல் மணி நிலவரப்படி கேரளாவில் 52 சதவீத வாக்குகளும், கர்நாடகாவில் 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கரில் 63.92%, ஜம்மு & காஷ்மீரில் 57.76% என வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வெயிலின் தாக்கத்தால் இந்த ஆண்டு வாக்குப்பதிவு சற்று மந்தமாகவே உள்ளது.
காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் உடனான காதல் குறித்துப் பேசிய அவர், தனக்குக் காதல் மீது எப்போதும் நம்பிக்கை இருப்பதாகக் கூறினார். தான் மிகவும் எளிமையாளவள் எனக் கூறிய அவர், காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென நினைப்பேன் என்றார். இதே விஷயத்தைத்தான் தனது பார்ட்னரிடமும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
ஜனநாயகத்தில் வாக்களிப்பு மிக முக்கியமானது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களின் உரிமையைப் பயன்படுத்துவதில் சுணக்கம் காட்டக் கூடாது, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். சோம்நாத்துக்குக் கேரளாவில் வாக்கு இருந்த நிலையில், இதற்காகப் பெங்களூருவில் இருந்து இன்று கேரளா சென்ற அவர், தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை செய்து வருகிறார். தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் & பி.ஆர்.எஸ் கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தடாலடியாகக் கூறியுள்ளார். அத்துடன் அந்த இட ஒதுக்கீட்டை எஸ்.சி, எஸ்.டி & ஓ.பி.சிகளுக்கு வழங்குவோம் என்றும் அவர் அறிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தொடர்ந்து பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கேரளாவில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை பார்வதி, வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும், மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணிக்கும் மாறாமல், ஒரே அணிக்காக விளையாடிய வீரர்கள் (குறைந்தது 70 போட்டிகளில்):
விராட் கோலி (பெங்களூரு) – 246
கிரண் பொல்லார்டு (மும்பை) – 189
சுனில் நரைன் (கொல்கத்தா) – 169
ஜஸ்பிரித் பும்ரா (மும்பை) – 128
லசித் மலிங்கா (மும்பை) – 122
ரிஷப் பண்ட் (டெல்லி கேப்டன்) – 107
பத்ரிநாத் (சென்னை) – 95 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.