India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் பிரதமர் மோடி நாட்டு மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்துவதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மோடியின் பரப்புரை குறித்துத் தேர்தல் ஆணையம் வரை புகார் அளிக்கப்பட்டும் தனது வெறிபிடித்த பரப்புரையைப் பிரதமர் மாற்றிக் கொள்ளாதது கண்டனத்துக்குரியது என்ற அவர், இதற்கான பதிலடியைத் தேர்தல் முடிவில் மோடி நிச்சயம் அனுபவிப்பார் என்றும் கூறினார்.
கேரளாவில் பரவிவரும் பறவைக் காய்ச்சலால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த பறவைகள், விலங்குகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை, வேகவைக்கப்படாத, குறைவாக வேகவைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
‘உறியடி’, ‘பைட் கிளப்’ படங்களைத் தொடர்ந்து விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ படம் மே 17ஆம் தேதி வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் இயக்கியுள்ள இப்படத்துக்குக் கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘எலெக்சன்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்காக வாக்குச் சேகரித்த பிரதமர் மோடி, மகள்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஓவைசி தெரிவித்துள்ளார். பிரஜ்வால் பின்னணியை அறிந்திருந்தும் மோடி ஏன் அவருக்கு வாக்குச் சேகரித்தார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் இருப்பதைப் போன்ற ஆபாச வீடியோ வெளியான நிலையில், அவர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். வீடியோ தொடர்பாகக் கர்நாடக அரசு விசாரணை நடத்தி வருகிறது.
பிறந்த ஊரிலேயே தீண்டாமைக் கொடுமையால் தள்ளி வைக்கப்பட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ஆவடி அருகே உள்ள கரளப்பாக்கத்தில் பிறந்த அவர், நான் ஒரு தலித் என்பதால் திரெளபதி அம்மன் கோயிலில் தன்னை அனுமதிக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், அந்தத் தீண்டாமைக் கொடுமை தனக்கு பிடிக்காததால் அதன்பிறகு அந்தக் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதே இல்லை எனவும் அவர் கூறினார்.
2 தேக்கரண்டி திரிபலா சூரணம், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், அரை தேக்கரண்டி வேப்ப எண்ணெய் இம்மூன்றையும் தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். பின்னர் தலையில் அனைத்து இடங்களிலும் படும்படி நன்றாக தேய்க்கவும். 30 நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு சீயக்காய் (அ) ஷாம்பூ போட்டு குளிக்கவும். வாரத்தில் 3 நாட்கள் இதை செய்து வர, அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு பிரச்சனைகள் தீரும்.
மக்களவைத் தேர்தலில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 94 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் மொத்தம் 1,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 9 சதவீதம், அதாவது 123 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவர். இவர்களில் 18% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும், 7 பேர் தாங்கள் தண்டனை பெற்றுள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
நவோதயா பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத 1353 காலிப் பணியிடங்களுக்கு, navodaya.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க நாளையே கடைசி. இதேபோல, இந்திய அணுசக்தி கழகத்தில் 400 காலிப் பணியிடங்களுக்கு B.Sc., B.E.,B.Tech., படித்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் பிரிவில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஜாமின் கோரி ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலிடம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுபான வழக்கில் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி அவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் இதுவரை ஏன் ஜாமின் கேட்கவில்லை என கேள்வி எழுப்பியது. வழக்கே சட்டவிரோதம் என்பதால் ஜாமின் கோரவில்லை என கெஜ்ரிவால் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட விவகாரத்தில், பிபிசிக்கு டெல்லி கோர்ட் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்தாண்டு வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நிறுவனம் மீது குஜராத் என்.ஜி.ஓ வழக்கு தொடுத்தது. ஏற்கெனவே அனுப்பிய சம்மன் சென்றடையாத நிலையில், பிரிட்டனில் உள்ள பிபிசி முகவரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டில் நடைபெறுமென அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.