news

News April 30, 2024

₹4 கோடி பறிமுதல்.. சிபிசிஐடி சம்மன்

image

சென்னையில் ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கைதான 2 பேரும் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவ இடமான தாம்பரம் ரயில் நிலையம், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்திய பின்பு, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News April 30, 2024

தென்னிந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது

image

மக்களவைத் தேர்தலின் 2 கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தென்னிந்தியாவில் பாஜகவுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், இரண்டு கட்ட வாக்குப்பதிவின் முடிவில், தங்கள் கணிப்பின்படி பாஜக கூட்டணி 100 இடங்களுக்கும் மேல் அபார வெற்றிபெறும் என்றார். மேலும், ‘400 இடங்கள்’ என்ற எங்களது முடிவை நோக்கிப் பயணிக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

News April 30, 2024

மனநிலை சரியில்லையெனில் லீவ் எடுக்கலாம்

image

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், ஊழியர்களுக்கு மனநிலை சரியில்லையெனில் Unhappy Leave எடுத்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி நேரமே வேலை செய்ய வேண்டும் என்பதே தனது கொள்கை எனக் கூறிய அந்நிறுவனத்தின் உரிமையாளர் யு டாங்லாய், தாங்கள் பணக்காரர்களாக இருப்பதைவிட, ஊழியர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது முக்கியம் என்றார்.

News April 30, 2024

போலி வீடியோக்களை உருவாக்குவதில் பாஜக கில்லாடி

image

போலி வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதில் பாஜகவினர் நிபுணத்துவம் பெற்றவர்கள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தனது குரலைப் போலியாக உருவாக்கி அவதூறு பரப்புவதாகக் குற்றம்சாட்டிய பிரதமருக்கு பதில் அளித்த அவர், அவதூறு பேச்சுக்களை பேசுவது மோடியின் வாடிக்கை என்றார். தேர்தல் நேரத்திலாவது அவர் வெறுப்பு பேச்சுக்களை பேசாமல் இருக்க வேண்டும் என பதிலடி கொடுத்தார்.

News April 30, 2024

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாளாகும். புதிய விதிகளின் படி ஒரு நிதியாண்டில், முதல் அரையாண்டு நிதியை ஏப்ரல் 30, இரண்டாவது அரையாண்டு நிதியை அக்டோபர் 30க்குள் செலுத்த வேண்டும். அதன்படி, இன்றைக்குள் வரியை செலுத்தினால் அதிகபட்சமாக ₹5,000 தள்ளுபடி வழங்கப்படும். தாமதமாக வரி செலுத்தினால் மாதம் 1% தனி வட்டி விதிக்கப்படும்.

News April 30, 2024

அணை உடைந்த விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

image

கென்யாவில் உள்ள மிகப்பழமையான கிஜாப் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல், கென்யாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், பலர் மாயமாகியுள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

News April 30, 2024

திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளது

image

சங்கம்விடுதி நீர்த்தேக்கத் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட சம்பவத்தை திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தொட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், அதில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியுள்ளதென கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசிய முருகன், ST/SC மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

News April 30, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து, ₹54,000க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹6,750க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ₹87க்கும், ஒரு கிலோ ₹87,000க்கும் விற்பனையாகிறது.

News April 30, 2024

கோவை தேர்தல் முடிவை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி

image

கோவை மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரியும், தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

News April 30, 2024

அச்சத்தை ஏற்படுத்தும் கொரோனா தடுப்பூசி

image

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவியபோது அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். கொடிய நோயிலிருந்து அது நம்மைக் காக்கும் என்று மக்கள் நம்பினர். ஆனால், அதன்பின் ஏற்பட்ட மர்ம மரணங்கள், தடுப்பூசியின் நம்பகத்தன்மை மீது கேள்விகளை எழுப்பின. அந்த சந்தேகங்களை உறுதி செய்யும் விதமாக AstraZeneca நிறுவனம், தடுப்பூசியினால் பக்க விளைவுகள் வரும் என்று ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!