news

News May 5, 2024

வெற்றியின் மூலம் 3ஆவது இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே

image

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை, புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. முதலிரண்டு இடத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் முறையே குஜராத் மற்றும் மும்பை அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 5, 2024

அயோத்தி ராமர் கோயிலுக்கு ராகுல் செல்லவில்லை

image

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தும் ராகுல் காந்தி செல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். தெலங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ராகுலுக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், 2 பேரும் செல்லவில்லை என்றும், இதற்கு வாக்கு வங்கிதான் காரணமென்றும் கூறினார்.

News May 5, 2024

ப்யூன் விமர்சனம்: அமேதி காங்., வேட்பாளர் பதிலடி

image

தான் காந்தி குடும்பத்தின் பணியாளன் இல்லை என அமேதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா தெரிவித்துள்ளார். கட்சி வேட்பாளராக தேர்வு செய்துள்ளதால் அமேதியில் போட்டியிடுவதாக தெரிவித்த அவர், யாரை வேட்பாளராக தலைமை அறிவித்தாலும் பாஜகவை தோற்கடிப்போம் என்றார்.
முன்னதாக, ரேபரேலியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் தினேஷ் பிரதாப், அமேதியில் காங்., தனது ப்யூனை நிறுத்தியுள்ளதாக விமர்சித்தார்.

News May 5, 2024

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல்

image

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவை நீக்கிய மத்திய அரசு, சட்டப்பேரவையை கலைத்தது. அதையடுத்து, அங்கு எப்போது தேர்தல் நடத்தப்படுமென பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு, விரைவில் தேர்தல் நடத்தப்படும், ஆனால் காலவரையறை தெரிவிக்க இயலாது என்று ராஜ்நாத் சிங் பதிலளித்துள்ளார்.

News May 5, 2024

IPL: பஞ்சாப்பை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

image

ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக, ஜடேஜா 43 ரன்கள் விளாசினார். இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே திணறியது. 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

News May 5, 2024

ICSE 10,12ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு நாளை ரிசல்ட்

image

ICSE பாடத்திட்டத்தில் 10,12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை ரிசல்ட் வெளியிடப்படவுள்ளது. 10, 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு நாளை காலை 11 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்படவுள்ளது. முடிவு வெளியிடப்பட்டதும், cisce.org, results.cisce.org. இணையதளங்களில் பகிரப்படும் என்று ICSE அறிவித்துள்ளது.

News May 5, 2024

கொல்கத்தா அணி பேட்டிங்

image

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் விளையாடுகிறது. 54ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7இல் வெற்றி பெற்றுள்ள KKR அணி புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது. இதேபோல, 10இல் 6 போட்டிகளில் வென்ற LSG அணி 3ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

News May 5, 2024

ஆந்திர டிஜிபியை பணியிட மாறுதல் செய்ய EC உத்தரவு

image

ஆந்திர டிஜிபியை பணியிட மாறுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர டிஜிபியாக ராஜேந்திரநாத் ரெட்டி உள்ளார். அவரை உடனடியாக பணியிட மாறுதல் செய்யவும், அந்த பதவிக்கு டிஜி நிலையிலான 3 காவல்துறை அதிகாரிகளை பரிந்துரைக்கும்படி, ஆந்திர அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ECன் இந்நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 5, 2024

தடுமாறும் பஞ்சாப் அணி; வெற்றியை நோக்கி சிஎஸ்கே

image

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. முதலில் விளையாடிய சென்னை, 167 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய பஞ்சாப், சிஎஸ்கே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறது. தற்போது, 15 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணியின் வெற்றி பிரகாசமாகியுள்ளது.

News May 5, 2024

மீன்களின் விலை 2 மடங்கு உயர்ந்தது

image

மீன்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளதால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்.15 முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்தது. இந்நிலையில் நேற்று வரை ₹100, ₹200க்கு விற்பனையான மீன்கள் இன்று ₹200, ₹400 என விலை உயர்ந்தது. ஞாயிற்றுக் கிழமையான இன்று, கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலை 2 மடங்காக உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!