India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். தான் போட்டியிடும் கோவை தொகுதியில் பல உதாரணங்களை எடுத்துக் கூறிய அவர், இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரே வாக்குச்சாவடியில் 850 வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மக்கள் 100 சதவிகிதம் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெசன்ட் நகர் வாக்குச் சாவடியில் தனது குடும்பத்துடன் அவர் வாக்கு செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தேனி தொகுதியில் தனக்கான ஆதரவு மிகவும் அமோகமாக இருப்பதாகக் கூறினார். மேலும், நடைபெற்று வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்தார்.
நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகியுள்ளன. கிழக்கு நாகாலாந்து மக்கள் தனி யூனியன் பிரதேச கோரிக்கையை முன்வைத்து தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க இஎன்பிஓ என்ற அமைப்பின் தலைமையில் மக்கள் முடிவெடுத்திருந்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க முடிவு திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது புதிய தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், முதியோர் என பலரும் வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையாற்றியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று வாக்களித்த பின் பேசிய அவர், கூல் சுரேஷ் கட்சி (CSK) என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாகவும், விரைவில் தனது கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வேன் எனவும் கூறினார். மேலும், 2026 தேர்தலில் போட்டியிடாவிட்டால் தவெகவுக்கு தனது கட்சி ஆதரவளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடியில் சசிகலா தனது வாக்கினை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் முடிவுகள் வெளியானப் பிறகு சிலர் போட்ட தப்புக் கணக்கு அவர்களுக்கு புரியும் என மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்தார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டுமென மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சரியானவர்களுக்கு வாக்களிக்காவிட்டால், வரும் காலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் ஆதார் அட்டையையும், குடியுரிமையையும் பறித்து விடுவார்கள் என குற்றம்சாட்டிய அவர், அசாமில் சிஏஏ சட்டம் அமலாகி பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், மேற்குவங்கத்தில் சிஏஏ, என்ஆர்சியை அனுமதிக்க மாட்டேன் என்றார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபைத் தொகுதித் தேர்தலுக்கும் சேர்த்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 272 வாக்குச்சாவடிகளை கொண்ட அத்தொகுதியில் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி என 2 வாக்குகளை அத்தொகுதி வாக்காளர்கள் பதிவு செய்து வருகின்றனர். 1 மணி நிலவரப்படி அங்கு 34.39% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பல்லவன் இல்லம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களது சின்னமான ஒலி வாங்கிக்கு அருகில் இருக்கும் விளக்கு எரியவில்லை என்ற புகாரினால் நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அத்தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையாற்றினார் நடிகர் வடிவேலு. வாக்களித்த பின் பேசிய அவர், இந்திய குடிமகனாக, என் மனதில் உள்ள கருத்தை எனது விரல் மூலமாக பதிவு செய்துள்ளேன் என்றார். அப்போது சிவாஜியின் ‘இந்திய நாடு என் நாடு, இந்தியன் என்பது என் பேரு’ என்ற பாடலையும் பாடிக்காட்டி, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.
Sorry, no posts matched your criteria.