India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தமிழகத்தில் நிறைவு பெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். சில பகுதிகளில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும், பெரும்பாலன இடங்களில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நீங்கள் வாக்கு செலுத்தினீர்களா?
மணிப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை தீவைத்து எரித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூரில் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. இதில் தலைநகர் இம்பாலுக்கு அருகே உள்ள மொய்ராங் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடிய நபர்கள் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தை தீவைத்து எரித்துள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தி தன்னுடைய 5 வயது பேரன் ரோஹனுக்கு 15 லட்சம் இன்ஃபோசிஸ் பங்குகளை பரிசாக அளித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் தற்போதைய மதிப்பு ₹213 கோடி. இந்நிலையில் நேற்று ₹28 ரூபாயை ஈவுத்தொகையாக (dividend) அறிவித்தது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதில் மட்டும் ரோஹனுக்கு ₹4 கோடியே 20 லட்சம் கிடைக்கப் போகிறது.
5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 63.20 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 67.52% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.04% வாக்குப்பதிவு நடந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 72.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விளவங்கோடு இடைத் தேர்தலில் 56.60 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாமக வேட்பாளர் கே.பாலு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் கள்ள ஓட்டுக்கள் பதியப்படுவதாக அவர் புகார் எழுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கை கேட்டு அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அரியலூர் மாவட்டம் நரசிங்கபுரத்தில் பாஜகவினர் விசிகவினர் இடையேயான மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. வாக்குபதிவு அறைக்குள் இருந்த விசிகவினரை பாஜகவினர் வெளியேற சொன்னதால் மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த 3 பேர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை மார்கெட் பகுதியில் அதிமுக-திமுக இடையே மோதல் ஏற்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. விமான நிலையங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 30 நிமிடங்களில் வாக்குப் பதிவுக்கான நேரம் நிறைவடைய உள்ளது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் வாக்குப் பதிவு மந்த நிலையிலேயே இருந்து வந்தது. வெயில் காரணமாக சிலர் வாக்களிக்க வராத நிலையில், தற்போது வெயில் குறையத் தொடங்கியுள்ளதால் மக்கள் அனைவரையும் தவறாமல் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்.
நம் முன்னோர்கள் கட்டிக்காத்த இந்தியாவை மீட்பதற்காக வாக்களித்துள்ளேன் என இயக்குநர் அமீர் கூறியுள்ளார். மதுரை அம்பிகா கல்லூரியில் வாக்களித்த பின் பேசிய அவர், சாதி, மதம் கடந்து நாட்டின் நலன் கருதி வாக்களிக்க வேண்டிய தருணம் இது. நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாக்களிப்பதுதான் சரியாக இருக்கும் என்றார். மேலும், மக்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்னை திருவல்லிக்கேணி பல்லவன் வாக்குச்சாவடியில் EVM இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து பழுதான இயந்திரத்தை சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். விரைவில் அங்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.