India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யவும், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரியும் அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்குப் பின் விஷால் நடிப்பில் வெளியான படம் ‘ரத்னம்’. ஹரி இயக்கியிருந்த இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். ஏப்ரல் 26ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் சுமார் 20 கோடி வசூலைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் மே 24ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.
➤ 1933 -தலித் மக்களின் நலனுக்காக காந்தி 21நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
➤ 1980 -பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
➤ 1921 -உருமேனியாவில் பொதுவுடமை கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
➤ 1902 -கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் உயிரிழந்தனர்.
➤ 2017 -தமிழ் விக்கிபீடியாவில் 100,000-வது கட்டுரை எழுதப்பட்ட நாள் இன்று.
தனக்கு எதிராக வாக்களிக்க சில ஜிகாதிகளை காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், குறிப்பிட்ட மதத்தவர்களிடம் தனக்கு எதிராக வாக்களிக்க காங்., கேட்டுக்கொண்டதாக குற்றம் சாட்டிய அவர், மக்கள் வாக்கு ஜிகாத்தை ஏற்க தயாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், வாக்கு ஜிகாத்தா இல்லை ராமராஜ்யமா என்பதே மக்களே முடிவு செய்யட்டும் என்றார்.
பிரதமர் மோடியின் புத்தகத்திற்கு ஆதரவளித்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு வேறொரு புத்தகத்தை பரிந்துரை செய்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். சாந்தனு குப்தா என்பவர் எழுதிய ‘நான் மோடிக்கு வாக்களிக்க 101 காரணங்கள்’ என்ற புத்தகத்தை பகிர்ந்திருந்தார் சாய்னா. இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்திய மக்களை தவறாக வழிநடத்தும் முன் ‘மோடியிடம் நாடு கேட்கும் 108 கேள்விகள்’ என்ற புத்தகத்தைப் படிங்க என்றார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்ற வங்கதேச அணி நெற்றி நடைபெற்ற 3ஆவது போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த வங்கதேச வீரர் தவ்ஹித் ஹ்ரிடோய் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4ஆவது போட்டி மே 12இல் நடக்கிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 142 ▶குறள்: அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். ▶பொருள்: பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.
சமீப காலமாக வெளியாகும் தமிழ்படங்கள் மக்களிடையே போதிய வரவேற்பைப் பெறாமல் இருக்கும் நிலையில், மலையாள படங்கள் அடுத்தடுத்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தி வருகின்றன. இந்த ஆண்டில் மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்திருந்த நிலையில், அண்மையில் வெளியான ஃபகத் பாசிலின் ‘ஆவேசம்’ படம் 150 கோடி வசூலித்துள்ளது. இதுதான் ஃபகத் பாசிலின் படங்களில் அதிகம் வசூலித்த படமாகும்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணி வரை கரூர், திண்டுக்கல், திருச்சி, நெல்லை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராமர் கோயில் பாரம்பரிய முறைப்படி கட்டப்படாததால் அது பயனற்றது என சமாஜ்வாதி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமேதி தொகுதி வேட்பாளர் ஸ்மிருதி இரானி, INDIA கூட்டணியினர் ராமரையும், சனாதனத்தையும் எதிர்ப்பது தெரிந்த விஷயம்தான் என்றார். மேலும், சனாதன விரோதிகளுக்கு இந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றார்.
Sorry, no posts matched your criteria.