news

News April 19, 2024

முதியவர் வாக்கை பதிவு செய்ய 18 கி.மீ. காட்டில் பயணம்

image

கேரளாவில் 92 வயது முதியவரின் வாக்கை பதிவு செய்ய வனவிலங்குகள் அதிகம் வாழும் மலைப்பகுதி காட்டுக்குள் 18 கி.மீ. தூரம் தேர்தல் அதிகாரிகள் பயணித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் எடமலைகுட்டியை சேர்ந்த சிவலிங்கம், முதுமை காரணமாக படுத்த படுக்கையாக உள்ளார். இருப்பினும் வீட்டில் இருந்து வாக்களிக்க மனு அளித்ததால், 3 பெண்கள் உள்ளிட்ட 9 அதிகாரிகள் சென்று வாக்கைப் பதிவு செய்தனர்.

News April 19, 2024

தேர்தல் பணியில் இருந்த CRPF வீரர் மரணம்

image

சத்தீஸ்கரில் தேர்தல் பணியின்போது கையெறிகுண்டு தவறுதலாக வெடித்ததில் CRPF வீரர் உயிரிழந்துள்ளார். பஸ்தார் தொகுதிக்குட்பட்ட பிஜப்பூரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த CRPF வீரர் தேவேந்திர குமார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரான பஸ்தாரில் நாளை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 19, 2024

ஜூன் 1 வரை கருத்துக்கணிப்புக்கு தடை

image

நாடு முழுவதும் இன்று தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் இறுதிக்கட்ட தேர்தல் (ஜூன் 1 மாலை 6.30 மணி) முடியும் வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஜூன் 1 மாலை 6.30க்குப் பின் கருத்துக்கணிப்புகள் வெளியாகும்.

News April 19, 2024

மக்களுக்கு நன்றி கூறிய ராமதாஸ்

image

மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்களித்த தமிழக மக்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மாற்ற வேண்டும், மோடி ஆட்சி மத்தியில் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், பாமக இடம்பெற்றுள்ள தே.ஜ.கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

News April 19, 2024

தமிழகத்தின் வாக்குப்பதிவு சதவீதம் (7 PM)

image

தேனி – 71.74%, மயிலாடுதுறை – 71.45%, ஈரோடு – 71.42%, திண்டுக்கல் – 71.37%, திருச்சி – 71.20%, கோவை – 71.17%, நீலகிரி – 71.07%, தென்காசி – 71.06%, சிவகங்கை – 71.05%, ராமநாதபுரம் – 71.05%, தூத்துக்குடி – 70.93, திருநெல்வேலி – 70.46%, குமரி – 70.15%, தஞ்சை – 69.82%, ஸ்ரீபெரும்புதூர் – 69.79%, வட சென்னை – 69.26, மதுரை – 68.98%, தென் சென்னை – 67.82%, மத்திய சென்னை – 67.35%.

News April 19, 2024

தமிழகத்தின் வாக்குப்பதிவு சதவீதம் (7 PM)

image

க.குறிச்சி – 75.67%, தர்மபுரி – 75.44%, சிதம்பரம் – 74.84%, பெரம்பலூர் – 74.46%, நாமக்கல் – 74.29%, கரூர் – 74.05%, அரக்கோணம் – 73.92%, ஆரணி – 73.77%, சேலம் – 73.55%, விழுப்புரம் – 73.49%, தி.மலை – 73.35%, வேலூர் – 73.04%, காஞ்சி – 72.99%, கிருஷ்ணகிரி – 72.96%, கடலூர் – 72.40%, விருதுநகர் – 72.29%, பொள்ளாச்சி – 72.22%, நாகை – 72.21%, திருப்பூர் – 72.02%, திருவள்ளூர் – 71.87%

News April 19, 2024

UPSC தேர்வில் தோற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு

image

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 இலட்சம் பேர் UPSC தேர்வு எழுதுகின்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் வெறும் 800 பேர்தான். மீதமுள்ள 99% பேர் தோல்வியடைகின்றனர். இந்நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஜீரோதா டிரேடிங் நிறுவனம் முதலீடு செய்துள்ள டிட்டோ இன்சூரன்ஸ் நிறுவனம் அவர்களுக்கு பணி வழங்க முன்வந்துள்ளது. அதன்படி, முன் அனுபவம் இல்லாவிட்டாலும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

News April 19, 2024

17 தேர்தல்களில் தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம்

image

1951 முதல் 2019 வரை தமிழகத்தில் நடைபெற்ற 17 மக்களவைத் தேர்தல்களில் பதிவான வாக்குப் பதிவு சதவீதம்.
*1951-52 – 59.33% வாக்குகள் பதிவு
*1957 – 47.75% *1962 – 68.77%
*1967 – 76.56% *1971 – 71.82%
*1977 – 67.13% *1980 – 66.76%
*1984 – 72.98% *1989 – 66.86%
*1991 – 63.92% *1996 – 66.93%
*1998 – 57.95% *1999 – 57.98%
*2004 – 60.81% *2009 – 72.94%
*2014 – 73.74% *2019 – 71.87%

News April 19, 2024

தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு

image

தமிழ்நாட்டில் மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இன்னும் பலர் டோக்கன் பெற்றுக் கொண்டு வாக்களிக்க வரிசையில் நிற்பதால் சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 19, 2024

39 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகள் 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. காலை 7 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். அங்கு ஆயுதம் ஏந்திய போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாடு முழுவதும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

error: Content is protected !!